/* */

சாதி சான்றிதழ் கேட்டு கடலூர் சார் ஆட்சியர் அலுவலகத்தில் ஆர்ப்பாட்டம்

சாதி சான்றிதழ் கேட்டு கடலூர் சார் ஆட்சியர் அலுவலகத்தில் குடுகுடுப்பை இனத்தை சேர்ந்த மாணவர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

HIGHLIGHTS

சாதி சான்றிதழ் கேட்டு கடலூர் சார் ஆட்சியர் அலுவலகத்தில் ஆர்ப்பாட்டம்
X
சாதி சான்றிதழ் கேட்டு குடுகுடுப்பை இனத்தை சேர்ந்த மாணவ மாணவிகள் கடலூரில் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

கடலூர் மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் குடு குடுப்பையுடன் குறி சொல்லும் கணிக்கர் சமுதாயத்தை சேர்ந்தவர்கள் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர், கடலூர் அருகே உள்ள பாதிரிகுப்பம், பண்ருட்டி, புதுப்பேட்டை போன்ற பல பகுதிகளில் குடும்பங்களாக வசித்து வருகின்றனர். இந்த கணிக்கர் சமுதாயத்தை சேர்ந்த மக்களுக்கு சாதி சான்றிதழ் வேண்டும் என நீண்ட நாட்களாக கோரிக்கை வைத்து வருகின்றனர்.

அதன் படி கடந்த சில மாதங்களுக்கு முன்னர் கடலூர் அடுத்த பாதிரிகுப்பம் பகுதியில் வசித்து வரும் சுமார் 20 க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். அவர்களுக்கு சாதி சான்றிதழ் வழங்க வழி வகை செய்யும் அப்பொழுதைய கடலூர் வட்டாட்சியர் பலராமன் மற்றும் பாதிரிகுப்பம் ஊராட்சி மன்ற தலைவர் தலைமையில் மனுக்கள் பெரும் சிறப்பு முகாம் நடைபெற்றது.

இந்த நிலையில் பண்ருட்டி அடுத்த புதுப்பேட்டை பகுதியில் 500 க்கு மேற்பட்ட குடும்பங்கள் உள்ளன. இதில் 250 க்கு மேற்பட்ட பள்ளி மாணவ மாணவிகள் அரசு பள்ளியில் பயின்று வருகின்றனர்.இன்று புதுப்பேட்டை பகுதியை சேர்ந்த 100 க்கு மேற்பட்ட பள்ளி மாணவ மாணவிகளுடன் சாதி சான்றிதழ் வழங்க கோரி கடலூர் சார் ஆட்சியர் அலுவலகத்தை நூற்றுக்கும் மேற்பட்ட கணிக்கர்கள் குடும்பத்துடன் குடுகுடுப்பை இசைத்து முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். அப்போது பள்ளி மாணவ மாணவிகள் தங்கள் பெற்றோர்கள் போல நாங்கள் இனி குடுகுடுப்பை இசைக்க மாட்டோம், ஜோசியம் பார்க்க செல்லமாட்டோம் நன்றாக படித்து அரசு வேலைக்கு செல்ல விரும்புகிறோம் உடனியாக அரசு தங்களுக்கான சாதி சான்றிதழை வழங்க வேண்டும் என கையில் பதாகைகள் ஏந்திய படி கோஷம் எழுப்பினர்.

மேலும் மாணவ மாணவிகள் 11 வகுப்பு மற்றும் கல்லூரி சேர விரும்புவர்களுக்கு சாதி சான்றிதழ் கேட்டு வருகின்றனர். இவர்களுக்கு சாதி சான்றிதழ் இல்லாத்தால் மேற்ப்படிப்பு பயிலமுடியாத நிலை ஏற்பட்டு வருகிறது.இதனால் அரசு உடனடியாக சாதி சான்றிதழ் வழங்க கோரி பல முறை மாவட்ட ஆட்சியரை சந்தித்து மனு அளித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை எனவும், மேலும் காலம் காலமாக தங்கள் தாய் தந்தை மற்றும் குடும்பத்தினர் அனைவரும் குடு குடுப்பை அடித்தும் ஜோசியம் பார்த்தும் காலத்தை கழித்து வந்தனார், அதே போல் நாங்களும் குடு குடுப்பை அடித்து எங்கள் காலத்தை ஓட்ட விருப்பம் இல்லை. நாங்கள் படித்து வேலைக்கு செல்லவே விரும்புகிறோம். ஆனால் எங்களிடம் ஜாதி சான்றிதழ் இல்லாத காரணத்தினால் தங்களால் மேற்படிப்பிற்கோ கல்லூரி படிப்பதற்கோ செல்ல முடியாத சூழல் ஏற்பட்டு உள்ளது எனவும் வேதனை தெரிவித்தனர்.

பின்னர் போராட்டத்தில் ஈடுப்பட்டவர்களிடம் சார் ஆட்சியர் அதியதான்கவியரசு பேச்சுவார்த்தை நடத்தி நடவடிக்கைகள் எடுப்பதாக உறுதி அளித்தார்.

Updated On: 4 April 2022 11:24 AM GMT

Related News

Latest News

  1. அம்பாசமுத்திரம்
    நெல்லை மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம்
  2. ஆன்மீகம்
    பிராணனைக் கட்டுப்படுத்துவதால் நம் உடலுக்கு என்ன பயன்?
  3. அரசியல்
    என் பணம் இல்லீங்க..! நயினார் நாகேந்திரன்..!
  4. தென்காசி
    தென்காசி மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம்
  5. பாளையங்கோட்டை
    நெல்லை மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
  6. ஈரோடு
    ஈரோடு எஸ்விஎன் பள்ளி மாணவன் சிலம்பம் சுற்றி உலக சாதனை புத்தகத்தில்...
  7. ஈரோடு
    ஈரோடு திண்டல் மலைக் கோவிலில் ராஜகோபுரம் அமைக்கும் பணி தீவிரம்
  8. சேலம்
    சேலம்: மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 5வது நாளாக 57 கன அடியாக நீடிப்பு
  9. செங்கம்
    திருவண்ணாமலை மாவட்ட நூலகங்களில் புத்தகத் தின விழா
  10. ஈரோடு
    ஈரோடு: ரெப்கோ வீட்டுக் கடன் சிறப்பு முகாம்