/* */

திதி கொடுக்க சென்றவர்களை தேனீ கொட்டியதில் ஒருவர் பலி : 13 பேர் காயம்

தேனீ கூட்டில் புகைபட்டவுடன் கூடு கலைந்ததால் தேனீக் கூட்டம் ரமேஷின் குடும்பத்தார் மீது கொட்டியது.

HIGHLIGHTS

திதி கொடுக்க சென்றவர்களை தேனீ கொட்டியதில் ஒருவர் பலி : 13 பேர் காயம்
X

பலியான ரமேஷ்.

கோவை மாவட்டம் பொள்ளாச்சி அருகே குரும்பபாளையம் பகுதியை சேர்ந்தவர் ரமேஷ். இவர் அப்பகுதியில் கறிக்கடை வைத்து நடத்தி வருகிறார். கடந்த சில தினங்கள் முன்பு அவரது பாட்டி காலமாகியுள்ளார். இதையடுத்து இன்று 16ம் நாள் ஈமா காரியம் செய்ய குடும்பத்தினருடன் அம்பாரபாளையம் பகுதி ஆற்றின் கரையோரம் ஓமாம் குண்டம் வளர்த்தி உள்ளனர். அப்போது எதிர்பாரவிதமாக காற்றில் புகை பரவி உள்ளது. பாறையின் மேலே தேனீ கூட்டில் புகைபட்டவுடன் கூடு கலைந்ததால் தேனீக் கூட்டம் ரமேஷின் குடும்பத்தார் மீது கொட்டியது.

தேனி கொட்டியதால் குடும்பத்தார் கலைந்து ஓடியுள்ளனர். அருகில் திதி கொடுத்த நபர்கள் மீதும் தேனீ கொட்டியது. தேனி கொட்டியதால் ரமேஷ் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். தகவல் அறிந்து வந்த பொள்ளாச்சி தாலுகா காவல் நிலைய போலீசார் தேனீ கொட்டிய 13 பேரை மீட்டு பொள்ளாச்சி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.

Updated On: 27 Aug 2021 9:00 AM GMT

Related News

Latest News

  1. நாமக்கல்
    மோகனூர் வடக்கு துணை அஞ்சலகம் திடீர் இடமாற்றம்: பொதுமக்கள் அதிர்ச்சி
  2. செங்கம்
    சூறைக்காற்றால், திருவண்ணாமலை மாவட்டத்தில் வாழைகள் சேதம்
  3. நாமக்கல்
    பிளஸ் 2 பொதுத்தேர்வில் 100 சதவீத தேர்ச்சி 14 அரசுப் பள்ளிகளுக்கு...
  4. இந்தியா
    ம‌க்களவை 3-ஆ‌ம் க‌ட்ட தே‌ர்த‌ல்: 93 தொகுதிகளி‌ல் 64% வா‌க்கு‌ப்பதிவு
  5. ஆன்மீகம்
    Horoscope Today அனைத்து ராசிக்கான இன்றைய ராசிபலன்
  6. ஆரணி
    பட்டா பெயர் மாற்றம் செய்ய லஞ்சம் வாங்கிய விஏஓ கைது
  7. திருவண்ணாமலை
    மழை வேண்டி திருவாசகத்தை சுமந்தபடி கிரிவலம்
  8. கோவை மாநகர்
    திமுகவிற்கு எதிராக பேசியதால் போலீஸ் மூலம் பழிவாங்குகின்றனர்; சவுக்கு...
  9. லைஃப்ஸ்டைல்
    சகோதரிகள், இணை பிரியா தோழிகள்..!
  10. வானிலை
    தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளுக்கான தினசரி வானிலை...