/* */

தமிழகத்துக்கு மேலும் 3.24 லட்சம் கோவிஷீல்டு தடுப்பூசிகள் சென்னை வருகை

தமிழகத்துக்கு மேலும் 3.24 லட்சம் கோவிஷீல்டு தடுப்பூசிகள் 27 பாா்சல்களில் புனேவிலிருந்து இன்று சென்னை வந்து சோ்ந்தன.

HIGHLIGHTS

தமிழகத்துக்கு மேலும் 3.24 லட்சம் கோவிஷீல்டு தடுப்பூசிகள் சென்னை வருகை
X

தமிழகத்தில் கொரோனா வைரஸ் இரண்டாம் அலை மே மாதம் உச்சக்கட்ட பாதிப்பை ஏற்படுத்தியது. தமிழக அரசு எடுத்த தீவிர நடவடிக்கைகள், கடுமையான ஊரடங்கு கட்டுப்பாடுகளால் கொரோனா வைரஸ் பாதிப்பு தற்போது படிப்படியாக குறைந்து வருகிறது.

இரண்டாம் அலை பாதிப்பு கிட்டத்தட்ட முடிவடையும் நிலையில், கடந்த சில தினங்களாக சென்னை, செங்கல்பட்டு, கோவை உள்ளிட்ட மாவட்டங்கள் உட்பட தமிழகம் முழுவதும் கொரோனா வைரஸ் தினசரி பாதிப்பு அதிகரித்து வருகிறது.

இது கொரோனா வைரஸ் 3 ம் அலை தொடங்குவதற்கான அறிகுறியாக இருக்கக்கூடும் என்று மருத்துவ வல்லுனா்கள் குழு எச்சரித்துள்ளது. அதிலிருந்து தப்பிக்க 18 வயதிற்கு மேற்பட்ட அனைவரும் கொரோனா வைரஸ் தடுப்பூசிகளின் 2 கட்ட டோஸ்களையும் போட்டுக்கொள்ள வேண்டும். அதோடு அனைவரும் மாஸ்க் அணிவது, பொது இடங்களில் சமூக இடைவெளியை கடைப்பிடிப்பதை தொடா்ந்து மக்கள் அனைவரும் கட்டாயமாக கடைப்பிடிக்க வேண்டும் என்றும் கூறியுள்ளது.

இதையடுத்து தமிழக அரசு மக்கள் அனைவரையும் கட்டாயமாக தடுப்பூசிகள் போடும்படி அறிவுறுத்தியுள்ளது. இதனால் மக்கள் அனைவரும் தடுப்பூசிகள் போட்டுக்கொள்வதில் மிகுந்த ஆா்வம் காட்டுகின்றனா். நீண்ட வரிசையில் காத்திருந்து தடுப்பூசிகளை செலுத்தி வருகின்றனா். எனவே தமிழகத்திற்கு கூடுதல் தடுப்பூசிகள் தேவைப்படுகின்றன. இதையடுத்து ஒன்றிய அரசிடம் கூடுதலாக தமிழகத்திற்கு தடுப்பூசிகளை அனுப்பும்படி தமிழக அரசு கோரிக்கை விடுத்து வருகிறார்.

இந்நிலையில், ஒன்றிய சுகாதாரத்துறை தமிழகத்திற்கு இன்று, மகராஷ்டிரா மாநிலம் புனேவில் உள்ள ஒன்றிய மருந்து கிடங்கிலிருந்து 3,24,000 டோஸ் கோவிஷீல்டு தடுப்பூசிகளை விடுவித்தது. அந்த 3,24,000 டோஸ் கோவிஷீல்டு தடுப்பூசிகள் அடங்கிய 27 பாா்சல்கள் புனேவிலிருந்து சென்னை வரும் இண்டிகோ ஏா்லைன்ஸ் விமானத்தில் ஏற்றப்பட்டு, இன்று பகல் 12 மணிக்கு சென்னை விமானநிலையம் வந்து சோ்ந்தன. உடனடியாக சென்னை விமானநிலைய லோடா்கள் தடுப்பூசி பாா்சல்களை விமானத்திலிருந்து கீழே இறக்கினா். அதன்பின்பு தடுப்பூசி பாா்சல்கள் தமிழ்நாடு அரசு மக்கள் நல்வாழ்வு துறை அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டது. அவா்கள் குளிா்சாதன வாகனங்களில் ஏற்றி,சென்னைக்கு தேனாம்பேட்டையில் டிஎம்எஸ் அலுவலகத்திற்கு எடுத்து சென்றனா். அங்கிருந்து தமிழகத்தில் பல்வேறு பகுதிகளுக்கு தேவைகளுக்கு ஏற்ப பிரித்து அனுப்பப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்தனா்.

இதே விமானத்தில் மேலும் 48 ஆயிரம் டோஸ் கோவிஷீல்டு தடுப்பூசிகள் 4 பாா்சல்களில் சென்னை வந்தன.அந்த தடுப்பூசிகள் சென்னையில் உள்ள தனியாா் மருத்துவமனைகளுக்கு வந்துள்ளதாக விமானநிலைய அதிகாரிகள் தெரிவித்தனா்.

இதனால் இன்று ஒரு நாளில் புனேவில் உள்ள ஒன்றிய மருந்து கிடங்கிலிருந்து 3,72,000 டோஸ் கோவிஷீல்டு தடுப்பூசிகள் 31 பாா்சல்களில் சென்னை வந்துள்ளன.

Updated On: 7 Aug 2021 1:58 PM GMT

Related News

Latest News

  1. அம்பாசமுத்திரம்
    நெல்லை மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம்
  2. ஆன்மீகம்
    பிராணனைக் கட்டுப்படுத்துவதால் நம் உடலுக்கு என்ன பயன்?
  3. அரசியல்
    என் பணம் இல்லீங்க..! நயினார் நாகேந்திரன்..!
  4. தென்காசி
    தென்காசி மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம்
  5. பாளையங்கோட்டை
    நெல்லை மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
  6. ஈரோடு
    ஈரோடு எஸ்விஎன் பள்ளி மாணவன் சிலம்பம் சுற்றி உலக சாதனை புத்தகத்தில்...
  7. ஈரோடு
    ஈரோடு திண்டல் மலைக் கோவிலில் ராஜகோபுரம் அமைக்கும் பணி தீவிரம்
  8. சேலம்
    சேலம்: மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 5வது நாளாக 57 கன அடியாக நீடிப்பு
  9. செங்கம்
    திருவண்ணாமலை மாவட்ட நூலகங்களில் புத்தகத் தின விழா
  10. ஈரோடு
    ஈரோடு: ரெப்கோ வீட்டுக் கடன் சிறப்பு முகாம்