/* */

தமிழகத்தில் முதல் மரபணு ஆய்வகம் இன்று திறப்பு

சென்னையில் உருமாற்றம் அடையும் கொரானா வைரசை கண்டறியும் மரபணு ஆய்வகத்தை, முதல்வர் ஸ்டாலின் இன்று திறந்து வைக்கிறார்.

HIGHLIGHTS

தமிழகத்தில் முதல் மரபணு ஆய்வகம் இன்று திறப்பு
X

இந்தியாவில் கொரானா வைரஸ் உருமாற்றத்தை கண்டறிய 10 ஆய்வகங்கள் இயங்கி வருகிறது. தமிழகத்தில் ஒரு ஆய்வகம் கூட இல்லை. தற்போது உருமாறிய கொரோனா வைரஸ்களான டெல்டா மற்றும் டெல்டா பிளஸ் கண்டறிய மாதிரிகள், பெங்களூரு அல்லது புனே ஆய்வகங்களுக்கு அனுப்பப்படுகின்றன.

அங்கிருந்து பரிசோதனை முடிவுகள் வர காலதாமதம் ஏற்படுவதால், தமிழகத்தில் உருமாற்றம் அடையும் கொரோனா வைரஸ் அடுத்த நிலைக்கு சென்று விடுகிறது. இதற்கு தீர்வு காணும் வகையில், சென்னை தேனாம்பேட்டை டி.எம்.எஸ்., வளாகத்தில், ரூ. 4 கோடி மதிப்பில் மரபணு ஆய்வகம் அமைக்கப்பட இருக்கிறது. பல்வேறு கருவிகளை உள்ளடக்கிய ஆய்வகத்தை இயக்குவதற்காக, ஆறு பேர் குழுவினர் பெங்களூரில் சிறப்பு பயிற்சியை முடித்துள்ளனர்.

இவர்களுடன் பணிபுரிய மேலும் நான்கு பேர் நியமிக்கப்பட்டுள்ளனர். ஒரே நேரத்தில் ஆயிரம் மாதிரிகளை பரிசோதனை செய்வதற்கான சோதனை ஓட்டம் நிறைவடைந்தது. இதை தொடர்ந்து, மரபணு ஆய்வகத்தை, முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று திறந்து வைக்கிறார்.

Updated On: 14 Sep 2021 4:37 AM GMT

Related News

Latest News

  1. பாளையங்கோட்டை
    நெல்லை மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
  2. ஈரோடு
    ஈரோடு எஸ்விஎன் பள்ளி மாணவன் சிலம்பம் சுற்றி உலக சாதனை புத்தகத்தில்...
  3. ஈரோடு
    ஈரோடு திண்டல் மலைக் கோவிலில் ராஜகோபுரம் அமைக்கும் பணி தீவிரம்
  4. சேலம்
    சேலம்: மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 5வது நாளாக 57 கன அடியாக நீடிப்பு
  5. செங்கம்
    திருவண்ணாமலை மாவட்ட நூலகங்களில் புத்தகத் தின விழா
  6. ஈரோடு
    ஈரோடு: ரெப்கோ வீட்டுக் கடன் சிறப்பு முகாம்
  7. செய்யாறு
    திருவண்ணாமலை மாவட்டத்தில் அதிமுகவினர் தண்ணீா் பந்தல்கள் திறப்பு
  8. வீடியோ
    🔴LIVE : தனித்து நின்றால் திமுக டெபாசிட் கூட வாங்காது - பாஜக செய்தி...
  9. திருவண்ணாமலை
    திருவண்ணாமலை அருகே அதிகாலை காா் மீது வேன் மோதல்: 3 போ் உயிரிழப்பு
  10. திருவண்ணாமலை
    திருவண்ணாமலை மாவட்டத்தில் உலக மலேரியா தின விழிப்புணர்வு நிகழ்ச்சி