Begin typing your search above and press return to search.
அம்பத்தூர்அண்ணா நகர்சேப்பாக்கம்ராதாகிருஷ்ணன் நகர்எழும்பூர்துறைமுகம்கொளத்தூர்மாதவரம்மதுரவாயல்மயிலாப்பூர்பெரம்பூர்இராயபுரம்சைதாப்பேட்டைதியாகராய நகர்திரு. வி. க. நகர்திருவொற்றியூர்ஆயிரம் விளக்குவேளச்சேரிவில்லிவாக்கம்விருகம்பாக்கம்
செங்குன்றம் அரசு நடுநிலைப் பள்ளியில் 6 அடி நீள பாம்பு மீட்பு
செங்குன்றம் அரசு நடுநிலைப் பள்ளியில் 6 அடி நீள பாம்பை தீயணைப்புத்துறையினர் மீட்டனர்.
HIGHLIGHTS
சென்னை செங்குன்றம் அடுத்த பாடியநல்லூர் அரசு நடுநிலைப்பள்ளியில் இன்று காலை சாரை பாம்பு ஒன்று நெளிந்து கொண்டிருப்பதை கண்ட மாணவர்களும் ஆசிரியர்களும் அலறியடித்து ஓடினர்.
பின்னர் அங்கிருந்தவர்கள் செங்குன்றம் தீயணைப்புத் துறைக்கு தகவல் தெரிவித்தனர். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்பு துறையினர் நீண்ட நேரம் போராடி மதிற்சுவர் பொந்துக்குள் ஒளிந்து கொண்டிருந்த ஆறடி நீள சாரைப்பாம்பை ஒருவழியாக பிடித்தனர்.
சாரைப் பாம்பு பிடிபட்டதும் அங்குள்ள மாணவர்கள் பெற்றோர்கள் ஆசிரியர்கள் நிம்மதி பெருமூச்சு விட்டனர். பிடிபட்ட சாரைப்பாம்பை வனத்துறையினரிடம் ஒப்படைக்கப்படும் என தீயணைப்பு வீரர்கள் தெரிவித்தனர்.