/* */

செங்கல்பட்டு: தண்ணீர் தாகத்தில் தவிக்கும் கீரப்பாக்கம் மக்கள்: கலெக்டர் பார்வை படுமா?

செங்கல்பட்டு மாவட்டம் கீரப்பாக்கம் ஊராட்சியில் குடிநீர் பஞ்சம் ஏற்பட்டுள்ளது. கலெக்டர் நடவடிக்கை எடுக்க பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

HIGHLIGHTS

செங்கல்பட்டு: தண்ணீர் தாகத்தில் தவிக்கும் கீரப்பாக்கம் மக்கள்: கலெக்டர் பார்வை படுமா?
X

கிராம சாலையோர குழாயில் தண்ணீர் பிடிக்கும் காட்சி.

செங்கல்பட்டு மாவட்டம், காட்டாங்கொளத்தூர் ஒன்றியத்திற்கு உட்பட்டது கீரப்பாக்கம் ஊராட்சி. இங்கு ஆயிரத்துக்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். பல மாதங்களாக இங்கு குடிநீர் பிரச்சினை நிலவி வருகிறது. இதற்கு நிரந்தர தீர்வு காணப்படாததால் நாளுக்கு நாள் தண்ணீர் பஞ்சம் தலைவிரித்தாடுகிறது.

ஏதோ கொஞ்சநஞ்சம் கிடைக்கும் குடிநீரும், அடிக்கடி மோட்டார் பழுதாவதால் அதுவும் சில நேரங்களில் கிடைக்காமல் போகிறது. இதுபற்றி சம்பந்தப்பட்ட ஊராட்சி நிர்வாகத்திடம் பொதுமக்கள் பலமுறை புகார் கூறியும் கண்டுகொள்ளாமல் மெத்தன போக்கை கடைப்பிடிப்பதாக பொதுமக்கள் சரமாரியாக குற்றம் சாட்டுகின்றனர்.

கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் 20ம் தேதி தொட்டி மாரியம்மன் கோவில் தெரு என்ற பகுதியில் சின்டெக்ஸ் தொட்டியில் தண்ணீர் நிரப்புவதற்காக அங்குள்ள சுவிட்ச் போட்டபோது அப்பகுதியை சேர்ந்த அலமேலு என்ற மூதாட்டி மின்சாரம் தாக்கி உயிரிழந்தார்.

அப்போது துண்டிக்கப்பட்ட மின் இணைப்பு இதுவரை பொருத்தப்படவில்லை. இதில் சின்டெக்ஸ் தொட்டி இடமாற்றம் செய்வதற்காக அங்கன்வாடி மையம் அருகில் ஆரம்பிக்கப்பட்ட பணி கடந்த 8 மாதங்களாக கிடப்பில் போடப்பட்டுள்ளது. இதனால் அப்பகுதி மக்கள் தண்ணீருக்காக அங்குமிங்குமாக அலைந்து திரிகின்றனர்.

அதே பகுதியில் மின் கம்பத்தில் கட்டி வைக்கப்பட்டுள்ள சுவிட்ச் பாக்ஸ் மற்றும் திறந்தவெளியில் கழட்டி விடப்பட்டுள்ள போர் மூலம் மின்சாரம் பாய்கிறது. இதனால் பொதுமக்கள் உயிர் பயத்தில் அச்சத்துடன் தண்ணீர் பிடித்து வருகின்றனர். இதேபோல் சாலை, தெருவிளக்கு, கால்வாய் உள்ளிட்ட எந்த ஒரு அடிப்படை வசதிகள் குறித்தும் பலமுறை புகார் கூறியும் ஊராட்சி செயலர் கண்டுக்கொள்ளவில்லை.

பல இடங்களில் போர்வெல் மற்றும் குடிநீர் கிணறு அமைக்கப்பட்டும் பல ஆண்டுகளாகியும் இதுவரை பொதுமக்களின் பயண்பாட்டிற்கு வரவில்லை. எனவே இதுகுறித்து மாவட்ட கலெக்டர் தலையிட்டு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், ஊராட்சி செயலரை உடனடியாக இடமாற்றம் செய்ய வேண்டும் என்றும் பொதுமக்கள் வலியுறுத்துகின்றனர்.

Updated On: 11 Jun 2021 7:17 AM GMT

Related News

Latest News

  1. ஆன்மீகம்
    பிராணனைக் கட்டுப்படுத்துவதால் நம் உடலுக்கு என்ன பயன்?
  2. அரசியல்
    என் பணம் இல்லீங்க..! நயினார் நாகேந்திரன்..!
  3. தென்காசி
    தென்காசி மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம்
  4. பாளையங்கோட்டை
    நெல்லை மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
  5. ஈரோடு
    ஈரோடு எஸ்விஎன் பள்ளி மாணவன் சிலம்பம் சுற்றி உலக சாதனை புத்தகத்தில்...
  6. ஈரோடு
    ஈரோடு திண்டல் மலைக் கோவிலில் ராஜகோபுரம் அமைக்கும் பணி தீவிரம்
  7. சேலம்
    சேலம்: மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 5வது நாளாக 57 கன அடியாக நீடிப்பு
  8. செங்கம்
    திருவண்ணாமலை மாவட்ட நூலகங்களில் புத்தகத் தின விழா
  9. ஈரோடு
    ஈரோடு: ரெப்கோ வீட்டுக் கடன் சிறப்பு முகாம்
  10. செய்யாறு
    திருவண்ணாமலை மாவட்டத்தில் அதிமுகவினர் தண்ணீா் பந்தல்கள் திறப்பு