/* */

மீன்வலையில் சிக்கி மீனவர் உயிரிழப்பு

மீன்வலையில் சிக்கி மீனவர் உயிரிழப்பு
X

மாமல்லபுரம் அருகே கட்டுமர படகில் கடலில் மீன் பிடிக்கச் சென்ற மீனவர் ஒருவர் கடலில் விரிக்கப்பட்டிருந்த வலையில் சிக்கி உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

மாமல்லபுரம் குப்பம் மீனவர் பகுதியை சேர்ந்தவர் ராஜேஷ்.இவர் தினமும் கடலுக்கு மீன் பிடிக்கச் செல்வது வழக்கம். இந்நிலையில் இன்று கட்டுமரத்தில் கடலில் மீன் பிடிக்கச் சென்ற இவர் திரும்பி வரும் போது கடலில் மற்ற மீனவர்களால் விரிக்கப்பட்டிருந்த வலையில் சிக்கி கட்டுமரம் திடீரென கவிழ்ந்தது. இதில் ராஜேஷ் சிக்கி உயிர் இழந்தார்.இதனிடையே கடலுக்குள் மீன் பிடிக்கச் சென்ற சக மீனவர்கள் கடலில் கட்டுமர படகு கவிழ்ந்திருப்பதை பார்த்த போது வலையில் சிக்கி ராஜேஷ் உயிரிழந்திருப்பது தெரிய வந்தது.

இதையடுத்து காவல்துறைக்கு தகவல் தெரிவித்த மீனவர்கள் ராஜேஷின் உடலையும் கைப்பற்றி கடற்கரைக்கு கொண்டு வந்தனர். பின்னர் அங்கு வந்த மாமல்லபுரம் போலீசார் ராஜேஷின் உடலை பிரேத பரிசோதனைக்காக செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Updated On: 28 Jan 2021 10:15 AM GMT

Related News

Latest News

  1. ஆன்மீகம்
    Horoscope Today அனைத்து ராசிக்கான இன்றைய ராசிபலன்
  2. பொன்னேரி
    ஸ்ரீ கரி கிருஷ்ணா பெருமாள் கோவிலின் தெப்பத் திருவிழா!
  3. திருத்தணி
    குடிதண்ணீர் வழங்காததை கண்டித்து கிராம மக்கள் சாலை மறியல்!
  4. நாமக்கல்
    நாமக்கல் உழவர் சந்தையில் இன்றைய காய்கறி மற்றும் பழங்கள் விலை நிலவரம்
  5. நாமக்கல்
    EVM அறைகளை கண்காணிக்க கூடுதலாக 10 சிசிடிவி கேமராக்கள்!
  6. வந்தவாசி
    கோடைகால விழிப்புணர்வு நிகழ்ச்சிகள்!
  7. திருவண்ணாமலை
    கூட்டாய்வுக்கு உட்படுத்தாத வாகனங்களுக்கு அனுமதி இல்லை, கலெக்டர்...
  8. லைஃப்ஸ்டைல்
    சமையலுக்கு ஏற்ற சிறந்த எண்ணெய் எது தெரியுமா?
  9. கோவை மாநகர்
    சவுக்கு சங்கர் நீதிமன்ற காவலில் கோவை சிறையில் அடைப்பு
  10. லைஃப்ஸ்டைல்
    டெல்லிக்கு ராசானாலும் பாட்டி சொல்லை தட்டாதே!