/* */

மதுராந்தகம்: விவசாய நிலத்தில் வைக்கப்பட்டிருந்த மின்சார வேலியில் சிக்கி வாலிபர் பலி!

மதுராந்தகம் விவசாய நிலத்தில் வைக்கப்பட்ட மின்சார வேலியில் சிக்கி அடையாளம் தெரியாத வாலிபர் பரிதாபமாக உயிரிழந்தார்.

HIGHLIGHTS

மதுராந்தகம்: விவசாய நிலத்தில் வைக்கப்பட்டிருந்த மின்சார வேலியில் சிக்கி வாலிபர் பலி!
X

செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகத்தை அடுத்த ஒழுப்பாக்கம் கிராமத்தில் பிரதான தொழிலாக இருந்து வருகிறது விவசாயம். வயல்வெளியில் பயிர்களை சேதப்படுத்தும் பன்றிகளை கொள்வதற்காக சட்டவிரோதமாக மின்சார வேலிகள் அமைக்கப்பட்டதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் வயல்வெளியில் அமைக்கப்பட்டிருந்த மின்சார வேலியில் சிக்கி 20 வயது மதிக்கத்தக்க வாலிபர் ஒருவர் உயிரிழந்துள்ளதாக இன்று காலை அவ்வழியே சென்றவர்கள் காவல்துறையினருக்கு தகவல் கொடுத்தனர்.

அங்கு விரைந்த மதுராந்தகம் காவல்துறையினர் இறந்து கிடந்தவர் இன் சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இறந்து கிடந்த வாலிபர் யார் எந்த ஊரைச் சேர்ந்தவர் எதற்காக நள்ளிரவில் இப்பகுதிக்கு வந்தார் என்று போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

மேலும் வயல்வெளியில் அதி சக்தி கொண்ட மின்சார வேலிகளை அமைத்ததாக கூறப்படும் விவசாயிகளிடமும் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்

Updated On: 15 Jun 2021 4:33 AM GMT

Related News

Latest News

  1. தென்காசி
    தென்காசி மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
  2. நாமக்கல்
    ப.வேலூர் டவுன் பஞ்சாயத்து சார்பில் பொதுமக்களுக்கு தண்ணீர் பந்தல்...
  3. நாமக்கல்
    கூட்டுறவு சங்கத்தில் ரூ.1.17 கோடி மோசடி: செயலாளர் உட்பட 2 பேர் கைது
  4. குமாரபாளையம்
    குமாரபாளையம் விநாயகர், பெருமாள் கோவில்களில் சிறப்பு வழிபாடு
  5. ஈரோடு
    கொளுத்தும் கோடை வெயில்: ஈரோட்டில் நேற்று 108.32 டிகிரி வெயில் பதிவு
  6. காஞ்சிபுரம்
    விடாமுயற்சியும் தன்னம்பிக்கைக்கு உதாரணமாக திகழ்கிறது நிலவொளிப் பள்ளி -...
  7. நாமக்கல்
    நாமக்கல் உழவர் சந்தையில் இன்றைய காய்கறி, பழங்கள் விலை நிலவரம்
  8. திருத்தணி
    திருத்தணி அருகே கிணற்றில் குளிக்கச் சென்ற சிறுவன் உயிரிழப்பு
  9. ஆன்மீகம்
    Horoscope Today அனைத்து ராசிக்கான இன்றைய ராசிபலன்
  10. வீடியோ
    களம் இறங்கிய NSG Commandos | அலறும் மம்தாவின் Trinamool Congress |...