/* */

மோகனூரில் தேசிய அளவில் குத்துச்சண்டை: 5 மாநில வீரர்கள் பங்கேற்பு

மோகனூரில் நடைபெற்ற தேசிய அளவிலான குத்துச்சண்டை போட்டியில், தமிழகம், கேரளா உள்பட 5 மாநில வீரர்கள் கலந்து கொண்டனர்.

HIGHLIGHTS

மோகனூரில் தேசிய அளவில் குத்துச்சண்டை: 5 மாநில வீரர்கள் பங்கேற்பு
X

மோகனூரில் நடைபெற்ற  தேசிய அளவிலான குத்துச்சண்டை போட்டியில் ஆக்ரோஷமாக மோதிக் கொண்ட வீரர்கள். 

நாமக்கல் மாவட்டம், மோகனூரில், சாய் பாக்சிங் அகாடமி சார்பில், தேசிய அளவிலான தொழில் முறை குத்துசண்டை போட்டி நடைபெற்றது. மோகனூர் முன்னாள் டவுன் பஞ்சாயத்து உடையவர் தலைமை வகித்தார். டவுன் பஞ்சாயத்து தலைவர் வனிதா, போலீஸ் இன்ஸ்பெக்டர் தங்கவேலு ஆகியோர் முன்னிலை வகித்தனர். மோகனூர் ஊராட்சி ஒன்றிய முன்னாள் சேர்மன் நவலடி, டாக்டர் ஷ்யாம்சுந்தர் ஆகியோர் போட்டியை துவக்கி வைத்தனர்.

இப்போட்டியில், தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா, மகாராஷ்டிரா, பஞ்சாப் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களை சேர்ந்த, வீரர்கள், வீராங்கனைகள் கலந்து கொண்டனர். போட்டிகள் 11 பிரிவுகளில், 4 சுற்றுகளாக நடைபெற்றது. இந்தியன் பாக்சிங் கவுன்சில் சூப்பர்வைசர் கேவிநாக்பூர்வாலா தலைமையில், நடுவர்கள் முன்னின்று, போட்டிகளை நடத்தினர்.

போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு மற்றும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன. தமிழகத்தில், மூன்றாம் முறையாக, மோகனூரில் நடைபெற்ற தேசிய அளவிலான குத்துசண்டை போட்டியை ஏராளமான பொதுமக்கள் பார்த்து ரசித்தனர். இதற்கான ஏற்பாடுகளை, சாய் பாக்சிங் அகாடமி நிறுவனர் திலக், ஹரிஹரன் ஆகியோர் செய்திருந்தனர்.

Updated On: 9 May 2022 12:45 AM GMT

Related News

Latest News

  1. நாமக்கல்
    தேர்தல் பணியின்போது உயிரிழந்த ஆசிரியரின் குடும்பத்திற்கு ரூ.15 லட்சம்...
  2. நாமக்கல்
    நாமக்கல் உழவர் சந்தையில் இன்றைய காய்கறி, பழங்கள் விலை நிலவரம்
  3. திருவண்ணாமலை
    திருவண்ணாமலை மாவட்டத்தில் தண்ணீர் பந்தல்கள் அமைக்க அமைச்சர்
  4. திருவண்ணாமலை
    திருவண்ணாமலையில் வீசும் அனல் காற்று: பொதுமக்கள் தவிப்பு
  5. தமிழ்நாடு
    விறுவிறு விலையேற்றம் தங்கமே.... தங்கம்...!
  6. தமிழ்நாடு
    பொறியியல் சேர்க்கை எப்போது விண்ணப்பிக்கலாம்?
  7. லைஃப்ஸ்டைல்
    35 வயதுக்கு மேற்பட்ட பெண்களுக்கான எடை இழப்பு சாத்தியமா?
  8. கோவை மாநகர்
    வடவள்ளியில் கோவில் நகைகளை திருடிய அர்ச்சகர் கைது
  9. லைஃப்ஸ்டைல்
    தன்மானம் சீண்டப்பட்டால் பூனை கூட புலியாகும்..!
  10. காஞ்சிபுரம்
    வெள்ளித் தேரில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்த ஸ்ரீ...