/* */

வாக்காளர் விழிப்புணர்வு புகைப்படக் கண்காட்சி கலெக்டர் துவக்கி வைத்தார்.

விருதுநகரில் வாக்காளர் விழிப்புணர்வு புகைப்படக் கண்காட்சியை மாவட்ட ஆட்சியர் கண்ணன் துவக்கி வைத்தார்.

HIGHLIGHTS

விருதுநகர் தேசப்பந்து மைதானத்தில், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை சார்பில் இன்று 100 சதவிகிதம் வாக்குப்பதிவை வலியுறுத்தி இதுவரை மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட்ட விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை தொகுத்து அமைக்கப்பட்ட புகைப்படக்கண்காட்சியினை துவக்கி வைத்தல் மற்றும் சவால் சக்கரம் (ஸ்பின்னிங் வீல்) வாக்காளர் விழிப்புணர்வு விளையாட்டு மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்தும் நிகழ்ச்சி மாவட்ட தேர்தல் அலுவலரும் மாவட்ட ஆட்சித்தலைவருமான கண்ணன்., தலைமையில் நடைபெற்றது.

விருதுநகர் மாவட்டத்தில், மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் 100 சதவிகிதம் வாக்குப்பதிவை வலியுறுத்தி, வாக்காளர்களை கவரும் வகையில் நாள்தோறும் பல்வேறு அரசுத் துறைகள் மூலம் தேர்தல் விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடைபெற்று வருகிறது.

அதனடிப்படையில் இன்று தேசப்பந்து மைதானத்தில், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை சார்பில் இதுவரை நமது மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட்ட விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை தொகுத்து அமைக்கப்பட்ட புகைப்படக்கண்காட்சியினை மாவட்ட ஆட்சியர் திறந்து வைத்தார்.

மேலும், தேர்தலில் வாக்களிப்பதன் அவசியம் மற்றும் விழிப்புணர்வு வாசகங்கள் பொறிக்கப்பட்ட சவால் சக்கரம் (ஸ்பின்னிங் வீல்) விளையாட்டும் நடைபெற்றது. இந்த சவால் சக்கரத்தில் இடம் பெற்றிருந்த ஒவ்வொரு வாக்காளர் விழிப்புணர்வு வாசகங்களுக்கும் மதிப்பெண்கள் அளிக்கப்பட்டு, அதற்கேற்ப பரிசுகள் வழங்கப்பட்டன.

அதன்படி, வாக்குச்சாவடிக்கு எடுத்துச் செல்லும் 12 ஆவணங்களை நன்கு அறிவேன் என்ற வாசகத்திற்கு 20 மதிப்பெண்களும், பணம் பொருள் ஏதும் வாங்காமல் வாக்களிப்பேன் என்ற வாசகத்திற்கு 15 மதிப்பெண்களும், நான் எனது வீட்டிலுள்ள பதிவு செய்த வாக்காளர்கள் அனைவரையும் வாக்களிக்கச் செய்வேன் என்ற வாசகத்திற்கு 10 மதிப்பெண்களும், எனது வாக்குச் சாவடி அமைந்துள்ள இடம் எனக்கு தெரியும் என்ற வாசகத்திற்கு 5 மதிப்பெண்களும்,

நான் வாக்களிக்க செல்லமாட்டேன், பணம் வாங்கிக் கொண்டு வாக்குச் சாவடிக்கு செல்வேன், நான் வாக்கு அளித்தது குறித்து இரகசியம் காக்க மாட்டேன் மற்றும் சுய சிந்தனையுடன் வாக்களிக்க மாட்டேன் போன்ற வாசகங்களுக்கு பூஜ்ஜியம் மதிப்பெண்ணும் அளிக்கப்பட்டது.

இவ்விளையாட்டில் பங்குபெற்றவர்களுக்கு மதிப்பெண்களுக்கேற்ப வாக்காளர் விழிப்புணர்வு டி-சர்டுகள், தொப்பிகள், பேட்ஜ்கள் மற்றும் ராக்கிகள் பரிசுகளாக மாவட்ட தேர்தல் அலுவலர். மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்களால் வழங்கப்பட்டன. பூஜ்ஜிய மதிப்பெண் பெற்றவர்கள் வாக்காளர் விழிப்புணர்வு உறுதிமொழி ஏற்றுக்கொண்டனர்.

Updated On: 29 March 2021 2:00 PM GMT

Related News

Latest News

  1. காஞ்சிபுரம்
    காஞ்சிபுரம் போக்குவரத்து காவல்துறை சார்பில் நிழற் பந்தல் அமைப்பு
  2. லைஃப்ஸ்டைல்
    சிதைந்த குடும்பம்..களைந்த கூடு..!
  3. காஞ்சிபுரம்
    காஞ்சிபுரம் மாவட்டத்தில் அரசு பள்ளி மாணவர்கள் 89 சதவீதம் தேர்ச்சி
  4. காஞ்சிபுரம்
    காஞ்சிபுரம் ஆகாய கன்னி அம்மன் ஆலயத்தில் திருக்கல்யாண உற்சவம்
  5. லைஃப்ஸ்டைல்
    அம்மாவை நினைத்து ஏங்கும் மேற்கோள்களும் விளக்கங்களும்
  6. மயிலாடுதுறை
    ஏவிசி கல்லூரியில் புதிய வகுப்பறை கட்டிட திறப்பு விழா..!
  7. நாமக்கல்
    பரமத்தி மலர் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் பிளஸ் 2 தேர்வில்
  8. வீடியோ
    Road- ட கூறுபோட்ட நாட்டையும் கூறுபோட்டு வித்துடுவ !#seeman...
  9. கல்வி
    பணம் சம்பாதிக்கணும் இல்லையா..? எந்த படிப்பை தேர்வு செய்யலாம்..?
  10. இராஜபாளையம்
    ராஜபாளையத்தில் அதிமுக சார்பில் நீர் மோர் பந்தல் திறப்பு