/* */

விருதுநகரில் வாகனச்சோதனையில் 288 மதுபாட்டில்கள் பறிமுதல்- ஒருவர் கைது

விருதுநகரில், வாகன சோதனையில் காரில் கொண்டு செல்லப்பட்ட 288 மதுபாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

HIGHLIGHTS

விருதுநகரில் வாகனச்சோதனையில் 288 மதுபாட்டில்கள் பறிமுதல்- ஒருவர் கைது
X

விருதுநகர்- சிவகாசி சாலையில், குமாரலிங்கபுரம் பேருந்து நிறுத்ததில், காவல்துறையினர் வாகன சோதனையில் ஈடுபட்டு கொண்டிருந்தனர். அப்போது விருதுநகர், பாண்டி நகர் பகுதியைச் சார்ந்த முரளி கிருஷ்ணன் என்பவர் ஓட்டி வந்த காரை நிறுத்தி சோதனை செய்ததில், 288 மதுபாட்டில்கள் இருப்பது தெரியவந்தது. அவரிடம் நடத்திய விசாரணையில், அவர் விருதுநகர் யானைகளை தெருவில் அரசு டாஸ்மாக் கடை ஒன்றில் பார் எடுத்து நடத்தி வருவதும் தெரியவந்தது

இன்று முதல், நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலுக்காக டாஸ்மாக் கடைகள் 3 நாட்கள் மூடப்படும் நிலையில் அதிக விலைக்கு விற்பனை செய்வதற்கு மதுபாட்டில்கள் கொண்டு செல்லப்பட்டதா என காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். காரை ஓட்டி வந்த முரளி கிருஷ்ணன் என்பவரை கைது செய்து, ஆமத்தூர் காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Updated On: 17 Feb 2022 12:15 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    என் இதய மாளிகையின் ராணி..! என்னை ஆட்சிபுரிபவள்..!
  2. பட்டுக்கோட்டை
    வேளாண் தொழில்நுட்பங்களை பயன்படுத்துங்க..! ஜோரான மகசூலை அள்ளுங்க..!
  3. குமாரபாளையம்
    ஆம்புலன்ஸ் ஓட்டுனர்களுக்கு பாராட்டு..!
  4. குமாரபாளையம்
    பணி நிறைவு பெறும் ஆசிரியர்களுக்கு பாராட்டு விழா!
  5. வீடியோ
    மத்திய அரசின் ஐடி பாதுகாப்பு சட்டம் | இந்தியாவில் Whatsapp சேவை...
  6. குமாரபாளையம்
    கிணற்றில் விழுந்த பசுவை மீட்ட தீயணைப்பு மற்றும் மீட்பு படையினர்!
  7. காஞ்சிபுரம்
    பாரதியார் உண்டு உறைவிட பள்ளி மாணவிகளுக்கு பட்டமளிப்பு விழா..!
  8. காஞ்சிபுரம்
    மருத்துவ மாணவர்களுக்கு புற்று நோயியல் கல்வி மற்றும் விழிப்புணர்வு...
  9. லைஃப்ஸ்டைல்
    நீ சென்ற பாதைநோக்கிய பயணத்தில் இருக்கிறேன் நான்..!
  10. சினிமா
    யாரிந்த அக்ஷய் கமல்..? 'குக் வித் கோமாளி' சீசன் 5 போட்டியாளர்..!