/* */

தக்காளி விலை வீழ்ச்சி... விவசாயிகள் கவலை

விருதுநகர் மாவட்டத்தில், விளைச்சல் அதிகமாக இருந்தும் தக்காளிக்கு உரிய விலை கிடைக்காததால் விவசாயிகள் கவலையடைந்துள்ளனர்.

HIGHLIGHTS

தக்காளி விலை வீழ்ச்சி...  விவசாயிகள் கவலை
X

விருதுநகர் மாவட்டத்தில் சுமார் 600 ஹெக்டேரில் தங்காளி சாகுபடி செய்யப்பட்டுள்ளது. ஏக்கருக்கு 300 கிலோ வரை விளைச்சல் உள்ள கிடைத்தும், தக்காளி வரத்து அதிகரிப்பால் போதிய விலை கிடைக்காததால் விவசாயிகள் நஷ்டத்தை சந்திக்கின்றனர்.

போதிய மழை இல்லாத நிலையில் கிணற்று பாசனத்தில் சாகுபடி செய்து வருகின்றனர். நடவு செய்த 30 நாட்களுக்கு காய்கள் கிடைப்பதாலும், பராமரிப்பு குறைவு என்பதாலும் பெரும்பாலான விவசாயிகள் தக்காளி சாகுபடியில் அதிக ஆர்வம் காட்டி வருகின்றனர்.

கடந்த ஜனவரி முதல், பிப்ரவரி இரண்டாவது வாரம் வரை சாரல் மழை கைகொடுத்ததால், விளைச்சல் அமோகமாக இருந்தது. ஆனால். விலை வீழ்ச்சியால், தக்காளி கிலோ 5 ரூபாய்க்கும் குறைவாக தங்களிடம் வியாபாரிகள் கொள்முதல் செய்வதால், கடும் நஷ்டம் ஏற்பட்டுள்ளதாக விவசாயிகள் வேதனை தெரிவிக்கின்றனர்.

உழவு, நடவு, உரம், பூச்சி கொல்லி உள்ளிட்ட செலவுகள் என்பது ஏக்கருக்கு 30 ஆயிரம் ரூபாய் செலவு செய்துள்ள நிலையில், தக்காளிக்கு உரிய விலை கிடைக்காமல் கடும் நஷ்டத்தை விவசாயிகள் சந்தித்து வருகின்றனர்.

Updated On: 29 April 2021 3:05 AM GMT

Related News

Latest News

  1. நாமக்கல்
    நாமக்கல்லில் முட்டை விலை தொடர் உயர்வு
  2. லைஃப்ஸ்டைல்
    தோல்வி கண்டு துவளாதீர்..! வீழ்ச்சி எழுச்சிக்கான முயற்சி..!
  3. லைஃப்ஸ்டைல்
    உனை பிரியாத வரவேண்டும் என்னுயிரே..!
  4. வீடியோ
    சினிமா படத்தில்ல இருக்கிறது எல்லாம் நல்லவா இருக்கு? ...
  5. லைஃப்ஸ்டைல்
    குடும்ப உறவாகும் நட்பு..! இருபக்க மகிழ்ச்சி..!
  6. பொன்னேரி
    ஆற்றில் சட்டவிரோதமாக மணல் கொள்ளை
  7. ஈரோடு
    ஈரோடு மாவட்டத்தில் 8 தேர்வு மையங்களில் நாளை நீட் தேர்வு
  8. ஈரோடு
    ஈரோடு சென்ட்ரல் ரோட்டரி சங்கம், ஈரோடு ஆத்மா மின்மயான அறக்கட்டளை...
  9. வீடியோ
    🔴LIVE : காங்கிரஸ் MLA ரூபி மனோகரன் செய்தியாளர் சந்திப்பு | Ruby...
  10. ஈரோடு
    பவானி அருகே காரில் ரேஷன் அரிசி கடத்தியவர் கைது..!