/* */

சீனாவிலிருந்து திரும்பிய தாய், மகளுக்கு கொரோனா பாதிப்பு

விருதுநகர் மாவட்டம், வத்திராயிருப்பு அருகேயுள்ள இலந்தைகுளம் பகுதியைச் சேர்ந்த தாயும் அவரது 6 வயது மகளுக்கு தொற்று உறுதி

HIGHLIGHTS

சீனாவிலிருந்து திரும்பிய தாய், மகளுக்கு கொரோனா பாதிப்பு
X

இலந்தைகுளம் பகுதியில், சிவகாசி சுகாதார துணை இயக்குனர் கழுசிவலிங்கம் தலைமையில் மருத்துவக் குழுவினர் தீவிரமாக ஆய்வு செய்தனர்.

வத்திராயிருப்பு அருகே சீன நாட்டிலிருந்து திரும்பிய தாய், மகளுக்கு கொரோனா பாதிப்பு உறுதியானதால் சுகாதாரத் துறை அதிகாரிகள் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர்.

சீனா உள்ளிட்ட உலக நாடுகளில் மீண்டும் கொரோனா பரவல் அதிகரித்து வருகிறது. இதனால், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இந்தியா முழுவதும் உள்ள விமான நிலையங்களில் வெளிநாட்டு பயணிகளுக்கு கட்டாய கொரோனா பரிசோதனை செய்ய உத்தரவிடப்பட்டுள்ளது.

நேற்று காலை, சீனாவில் இருந்து இலங்கை வழியாக மதுரைக்கு வந்த பயணிகள் விமானத்தில், பயணிகளுக்கு கொரோனா தொற்று பரிசோதனைகள் நடத்தப்பட்டன. இந்த பரிசோதனையில் விருதுநகர் மாவட்டம், வத்திராயிருப்பு அருகேயுள்ள இலந்தைகுளம் பகுதியைச் சேர்ந்த தாய் மற்றும் அவரது 6 வயது மகள் இருவருக்கும், கொரோனா தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டது. இதனால் தாய், மகள் இருவரும் அவர்களது வீட்டிலேயே 15 நாட்கள் தனிமைப்படுத்தப்பட்டு தீவிரமாக கண்காணிக்கப்பட்டு வருகின்றனர். மேலும், இவர்களுடன் தொடர்பில் இருந்த உறவினர்களுக்கு தொற்று பரிசோதனைகள் செய்வதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன.

இலந்தைகுளம் பகுதியில், சிவகாசி சுகாதார துணை இயக்குனர் கழுசிவலிங்கம் தலைமையில் மருத்துவக் குழுவினர் தீவிரமாக ஆய்வு செய்தனர். இது குறித்து துணை இயக்குநர் கலுசிவலிங்கம் கூறும்போது, இந்தப்பகுதியில் தொற்று பாதிப்பு தடுப்பு நடவடிக்கைகள் தீவிரமாக செயல்படுத்தப்பட்டு வருகிறது. தொற்று பாதிப்பு ஏற்பட்டுள்ளவர்களை மருத்துவக் குழுவினர் கண்காணித்து வருகின்றனர். எனவே பொதுமக்கள் யாரும் அச்சப்பட வேண்டாம் என்று கூறினார். மேலும் தாய், மகள் இருவருக்கும் உருமாறிய பிஎப்- 7 வகை கொரோனா தொற்று பாதிப்பு ஏற்பட்டுள்ளதா என்பதனை கண்டறிவதற்காக, அவர்களிடமிருந்து சளி மாதிரிகள் சேகரிக்கப்பட்டு, சென்னை ஆய்வகத்திற்கு அனுப்பப்பட்டுள்ளது என்று கூறினார்.

Updated On: 28 Dec 2022 3:30 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    இன்னும் என்னவளுடனான பயணம் தொடர்கிறது..!
  2. லைஃப்ஸ்டைல்
    வானத்து சல்லடையில் மேகம் ஊற்றிய நீர், மழை..!
  3. அரசியல்
    5 ஆண்டுகள் தூங்கிய ஜெகன் அண்ணனை வறுத்தெடுத்த தங்கை..!
  4. சேலம்
    மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 3வது நாளாக 82 கன அடியாக நீடிப்பு
  5. லைஃப்ஸ்டைல்
    ரமலான் காலத்தில் உடல் பலமும், மன வலிமையும்
  6. பட்டுக்கோட்டை
    வயலில் பாசி படர்ந்தால் நெல் எப்படி சுவாசிக்கும்? எப்படி சத்துக்களை...
  7. லைஃப்ஸ்டைல்
    கஷ்டங்கள் யாவும் கடந்து போகும்.. தோல்வியா? தூசிதான்!
  8. ஈரோடு
    பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து 173 கன அடியாக அதிகரிப்பு
  9. ஈரோடு
    ஈங்கூர் இந்துஸ்தான் கல்லூரியில் மாநில கைப்பந்து முகாம் நிறைவு விழா
  10. காஞ்சிபுரம்
    காஞ்சிபுரம் பொதுமக்களுக்கு இலவசமாக மோர் வழங்கிய போலீசார்