/* */

சதுரகிரி மகாலிங்கம் மலையில் குவிந்த பக்தர்கள் கூட்டம்

சுந்தரமகாலிங்கம் சுவாமிக்கு ,பிரதோஷம் மற்றும் அமாவாசையன்று சிறப்பு அபிஷேகங்கள் மற்றும் சிறப்பு பூஜைகள் நடைபெற உள்ளன

HIGHLIGHTS

சதுரகிரி மகாலிங்கம் மலையில் குவிந்த பக்தர்கள் கூட்டம்
X

விருதுநகர் அருகேயுள்ள சதுரகிரிமலையில் திரண்ட பக்தர்கள் கூட்டம்

விருதுநகர் மாவட்டம், சதுரகிரியில் பக்தர்கள் கூட்டம் அதிகரித்து காணப்படுகிறது. மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் சதுரகிரி சுந்தரமகாலிங்கம் சுவாமி கோயில் அமைந்துள்ளது.

இந்த கோயிலுக்கு, பிரதோஷம் மற்றும் அமாவாசையை முன்னிட்டு, வியாழக்கிழமை முதல் மே 1-ந் தேதி வரை 4 நாட்கள் பக்தர்கள் செல்ல அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக கோயில் நிர்வாகம் அறிவித்துள்ளது. பக்தர்கள், காலை 7 மணி முதல் மதியம் 11 மணிவரை மட்டுமே மலை ஏறி கோயிலுக்கு செல்ல அனுமதி வழங்கப்பட்டுள்ளது. சுந்தரமகாலிங்கம் சுவாமிக்கு ,பிரதோஷம் மற்றும் அமாவாசையன்று சிறப்பு அபிஷேகங்கள் மற்றும் சிறப்பு பூஜைகள் நடைபெற உள்ளன. இதற்கிடையில், கோயிலுக்கு செல்லும் மலைப்பாதைகளில் உள்ள நீரோடை பகுதிகளில் பக்தர்கள் இறங்கி குளிப்பதற்கும் தடை விதிக்கப் பட்டுள்ளது. மேலும், மழை பெய்தாலும் பக்தர்களுக்கு அனுமதி இல்லை என கூறப்பட்டுள்ளது.

Updated On: 29 April 2022 8:30 AM GMT

Related News

Latest News

  1. நத்தம்
    நத்தத்தில் அதிமுக சார்பில், நீர் மோர் பந்தல் திறப்பு: முன்னாள்...
  2. அம்பாசமுத்திரம்
    நெல்லை மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம்
  3. தென்காசி
    தென்காசி மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம்
  4. ஆன்மீகம்
    காற்றையாவது காசு கொடுக்காமல் வாங்குவோம்..!
  5. சேலம்
    மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 82 கன அடியாக அதிகரிப்பு
  6. சினிமா
    டி.எம்.எஸ்.,சுக்கு உதவிய சிவாஜி..!
  7. சினிமா
    இளையராஜா பாடிய முதல் பாடலே ட்ரெண்ட் செட்டானது... எப்படி?
  8. தமிழ்நாடு
    ஓய்வூதிய பலன்கள் கிடைப்பதை உறுதி செய்ய அரசு அறிவுறுத்தல்..!
  9. அரசியல்
    நரேந்திரமோடி- வாஜ்பாய் ஒற்றுமைகள் என்ன?
  10. பாளையங்கோட்டை
    நெல்லை மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்