/* */

சிவகாசி சிவன் கோவிலில் வைகாசி பிரமோற்சவ தேரோட்டம்

கடந்த வாரம் திங்கள் கிழமை, வைகாசி பிரமோற்சவ திருவிழா கொடியேற்றத்துடன் துவங்கியது

HIGHLIGHTS

சிவகாசி சிவன் கோவிலில் வைகாசி பிரமோற்சவ தேரோட்டம்
X

சிவகாசி சிவன் கோவில் வைகாசி பிரமோற்சவ தேரோட்டத்தில் திரளான பக்தர்கள் பங்கேற்று வடம் பிடித்து இழுத்தனர்.

விருதுநகர் மாவட்டம், சிவகாசியில் பிரசித்திபெற்ற ஸ்ரீவிஸ்வநாதர் சுவாமி - ஸ்ரீவிசாலாட்சி அம்மன் எழுந்தருளும் சிவன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் கடந்த வாரம் திங்கள் கிழமை, வைகாசி பிரமோற்சவ திருவிழா கொடியேற்றத்துடன் துவங்கியது. தினமும் சுவாமி - அம்பாள் சிறப்பு அலங்காரத்தில் ரிஷபம், காமதேனு, யானை உள்ளிட்ட பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி நான்கு ரதவீதிகளில் வலம் வந்து பக்தர்களுக்கு காட்சி தந்தனர்.

வைகாசி பிரமோற்சவ திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான திருத்தேரோட்டம் இன்று காலை நடைபெற்றது. கோயில் முன்பகுதியில் நிறுத்தப்பட்டிருந்த தேரில் ஸ்ரீவிஸ்வநாதர் சுவாமி - ஸ்ரீவிசாலாட்சி அம்மையுடன் சர்வ அலங்காரத்தில் எழுந்தருளினார். தேரில் எழுந்தருளிய சுவாமிக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. பின்னர் நான்கு ரதவீதிகளில் தேரோட்டம் நடைபெற்றது. தேரோட்டம் நிகழ்ச்சியில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு வடம்பிடித்து தேரிழுத்தனர். நிகழ்ச்சியில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். தேரோட்ட நிகழ்ச்சி ஏற்பாடுகளை கோவில் நிர்வாகிகள் சிறப்பாக செய்திருந்தனர்.

Updated On: 7 Jun 2022 9:15 AM GMT

Related News

Latest News

  1. அரசியல்
    காலை வாரிய கட்சியினர் அதிமுகவில் நடப்பது என்ன?
  2. லைஃப்ஸ்டைல்
    ப்ரூஸ் லீ தமிழ் மேற்கோள்களும் விளக்கங்களும்
  3. அரசியல்
    அதிருப்தி... விரக்தி... சுணக்கம்… சரிகிறதா அ.தி.மு.க செல்வாக்கு..?
  4. லைஃப்ஸ்டைல்
    கணவன் மனைவியை காயப்படுத்தும் மேற்கோள்களும் விளக்கங்களும்
  5. வீடியோ
    ஜூன் 4க்கு பிறகு தெரியும் | முதல்வரை கைது செய்ய வாய்ப்பு-H.Raja பேட்டி...
  6. ஈரோடு
    ஈரோடு: பவானிசாகர் அணையில் நீர்வரத்து 92 கன அடியாக சரிவு
  7. வீடியோ
    🔴LIVE : காங்கிரஸ்-யை பொளந்து கட்டிய மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன்...
  8. அம்பாசமுத்திரம்
    நெல்லை மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம்
  9. ஆன்மீகம்
    பிராணனைக் கட்டுப்படுத்துவதால் நம் உடலுக்கு என்ன பயன்?
  10. அரசியல்
    என் பணம் இல்லீங்க..! நயினார் நாகேந்திரன்..!