/* */

விருதுநகர் மாவட்டத்தில் கொடி நாள் வசூல் : ஆட்சியர் துவக்கம்

கொடிநாள் நிதி திரட்டும் நிகழ்ச்சியை மாவட்ட ஆட்சியர் மேகநாதரெட்டி நன்கொடை வழங்கி துவக்கி வைத்தார்

HIGHLIGHTS

விருதுநகர் மாவட்டத்தில்  கொடி  நாள் வசூல் : ஆட்சியர் துவக்கம்
X

பைல் படம்

விருதுநகர் மாவட்டத்தில் கொடிநாள் நிதி திரட்டும் நிகழ்ச்சியை மாவட்ட ஆட்சியர் துவக்கி வைத்தார்

விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், தேசிய படைவீரர் கொடிநாளை முன்னிட்டு, முன்னாள் படைவீரர் நலத்துறை மூலம் 2022ம் ஆண்டிற்கான கொடிநாள் நிதி திரட்டும் நிகழ்ச்சியை, மாவட்ட ஆட்சியர் மேகநாதரெட்டி நன்கொடை வழங்கி துவக்கி வைத்தார்.

நிகழ்ச்சியை துவக்கி வைத்து ஆட்சியர் மேகநாதரெட்டி பேசியதாவது: இந்திய திருநாட்டில் முப்படைகளில் பணிபுரிந்து தேச நலனுக்காக உயிர் நீத்த, காயமடைந்த வீரர்களின் தியாகத்தை நினைவுகூறும் வகையில், ஆண்டு தோறும் டிசம்பர் 7ம் தேதி படைவீரர் கொடி நாளாக அனுசரிக்கப்பட்டு வருகிறது. கொடிநாள் வசூலாக திரட்டப்படும் நிதி போரில் உயிர்நீத்த வீரர்களின் குடும்பத்தினருக்கு நல நிதியாகவும், போரில் காயமடைந்த வீரர்களுக்கு உதவி செய்திடவும் என பல்வேறு உதவிகள் செய்யப்பட்டு வருகிறது.

விருதுநகர் மாவட்டத்தில் கடந்த ஆண்டு கொடி நாள் நிதி திரட்டும் இலக்காக 95 லட்சத்து, 61 ஆயிரம் நிர்ணயிக்கப்பட்டது. ஆனால், அரசு ஊழியர்கள் மற்றும் பொதுமக்கள் பங்களிப்பினால் 1 கோடியே, 20 லட்சம் ரூபாய் நிதியாக திரட்டப்பட்டு வழங்கப்பட்டது. இந்த ஆண்டு கொடிநாள் நிதியாக 1 கோடியே 10 ஆயிரம் ரூபாய் இலக்காக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்த ஆண்டிற்கான கொடி நாள் வசூல் தொடங்கி வைக்கப்பட்டுள்ளது. அனைவரும் தேசிய படைவீரர் கொடிநாளை முன்னிட்டு, நன்கொடைகளை தாராளமாக வழங்க வேண்டும் என்று மாவட்ட ஆட்சியர் மேகநாதரெட்டி கேட்டுக்கொண்டார். நிகழ்ச்சியில், முன்னாள் படைவீரர் நல உதவி இயக்குனர் எட்வர்ட்ராஜ் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Updated On: 9 Dec 2022 3:50 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    நிறம் மாறும் மனிதர்கள்..! ஆபத்தானவர்கள்..!
  2. திருவள்ளூர்
    கோடை வெயிலின் காரணமாக 25 அடியாக குறைந்த பூண்டி நீர்த்தேக்க நீர்மட்டம்
  3. திருப்பரங்குன்றம்
    பாஜக வின் பி டீம் தேர்தல் ஆணையம்: மாணிக்கம் தாகூர் எம்பி...
  4. தேனி
    இங்கு எல்லாமே சாதிதான் : ஆந்திராவை ஆள போவது யார்?
  5. திருவள்ளூர்
    திமுக ஊராட்சி மன்ற தலைவரின் கணவர் மீது நடவடிக்கை எடுக்க கோரி புகார்
  6. க்ரைம்
    கோயம்பேடு செல்போன் கடையின் பூட்டை உடைத்து பணம்,செல்போன்கள் திருட்டு
  7. லைஃப்ஸ்டைல்
    ‘நான் வீழ்வேன் என்று நினைத்தாயோ...’ - பாரதியார் தமிழ் மேற்கோள்கள்!
  8. வீடியோ
    பரபரப்பான அந்த 4 நிமிடங்கள் | வாய் அடைத்துபோன பத்திரிகையாளர் |...
  9. லைஃப்ஸ்டைல்
    அழகான புள்ளிமானே, உனக்காக அழுதேனே! - உறவுகளின் வலிகள் மேற்கோள்கள்
  10. லைஃப்ஸ்டைல்
    நட்பு முறிவு கவிதைகள்...!