/* */

இருசக்கர வாகனத்தில் சக்கரத்தில் சேலை சிக்கி மனைவி சாவு: கணவர் காயம்

Wife killed after saree stuck in wheel of two-wheeler

HIGHLIGHTS

இருசக்கர வாகனத்தில் சக்கரத்தில் சேலை சிக்கி மனைவி சாவு: கணவர் காயம்
X

அருப்புக்கோட்டை அருகே, இருசக்கர வாகன சக்கரத்தில் சேலை சிக்கியதால் மனைவி உயிரிழந்தார் உடன் சென்ற கணவர் பலத்தகாயமடைந்தார்.

விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை அருகேயுள்ள பாளையம்பட்டி பகுதியைச் சேர்ந்தவர் சண்முகவேல் (42). இவரது மனைவி தனலட்சுமி (38).இவர்கள் இருவரும் கடந்த இரண்டு தினங்களுக்கு முன்பு இருசக்கர வாகனத்தில் அருப்புக்கோட்டைக்கு சென்று விட்டு, வீட்டுக்கு திரும்பி வந்து கொண்டிருந்தனர்.

அருப்புக்கோட்டை ரயில்வே மேம்பாலப் பகுதியில் வந்து கொண்டிருந்த போது, பலத்த காற்று வீசியது. இதில் தனலட்சுமியின் சேலை, அவர்கள் வந்த இருசக்கர வாகனத்தின் சக்கரத்தில் சிக்கியது. இதில் இருசக்கர வாகனம் நிலை தடுமாறி விபத்து ஏற்பட்டது. இதில் சண்முகவேல், தனலட்சுமி இருவரும் தூக்கி வீசப்பட்டு படுகாயமடைந்தனர். விபத்தை பார்த்து அருகிலிருந்தவர்கள் விரைந்து வந்து, படுகாயமடைந்து கிடந்த இருவரையும் மீட்டு தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்த்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக தனலட்சுமி, சண்முகவேல் இருவரும் மதுரை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். அங்கு சிகிச்சை பலனளிக்காமல் தனலட்சுமி பரிதாபமாக உயிரிழந்தார். உயிருக்கு ஆபத்தான நிலையில் சண்முகவேல் சிகிச்சை பெற்று வருகிறார். இந்த விபத்து குறித்து அருப்புக்கோட்டை நகர் காவல்நிலைய போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Updated On: 18 Jun 2022 8:15 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    அம்மாவை நினைத்து ஏங்கும் மேற்கோள்களும் விளக்கங்களும்
  2. மயிலாடுதுறை
    ஏவிசி கல்லூரியில் புதிய வகுப்பறை கட்டிட திறப்பு விழா..!
  3. நாமக்கல்
    பரமத்தி மலர் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் பிளஸ் 2 தேர்வில்
  4. கல்வி
    பணம் சம்பாதிக்கணும் இல்லையா..? எந்த படிப்பை தேர்வு செய்யலாம்..?
  5. இராஜபாளையம்
    ராஜபாளையத்தில் அதிமுக சார்பில் நீர் மோர் பந்தல் திறப்பு
  6. லைஃப்ஸ்டைல்
    அப்பா இல்லாத ஏக்கம்: கவிதைகள் மற்றும் மேற்கோள்கள்
  7. வீடியோ
    மத்தியில் கூட்டாட்சி ! மாநிலத்தில் தன்னாட்சி Seeman!#seeman #ntk...
  8. கோவை மாநகர்
    சவுக்கு சங்கரை காவலில் எடுத்து விசாரிக்க போலீசார் மனுத்தாக்கல்
  9. கோவை மாநகர்
    குடிநீர் பிரச்சினையை தீர்க்க நடவடிக்கை எடுக்க வேண்டும்: எஸ். பி....
  10. கல்வி
    மதிப்பெண் மட்டுமே தகுதி அல்ல..! பெற்றோரே கவனியுங்கள்..!