விழுப்புரம் மாவட்ட ஜே.ஆர்.சி. ஒருங்கிணைப்பாளருக்கு நற்சான்று
JRC in Tamil - விழுப்புரத்தில் நடைபெற்ற சுதந்திர தின விழாவில் மாவட்ட ஜே.ஆர்.சி .கன்வீருக்கு மாவட்ட ஆட்சியர் மோகன் நற்சான்று வழங்கினார்.
HIGHLIGHTS
JRC in Tamil -ஆகஸ்ட் 15- ந்தேதி நடைபெற்ற சுதந்திர தின விழாவில் ஜே.ஆர்.சி. மாவட்ட கன்வீனருக்கு நற்சான்றை மாவட்ட ஆட்சியர் மோகன் வழங்கினார்.
விழுப்புரம் மாவட்ட கல்வித்துறையில் நல்லாசிரியர் விருது பெற்று,முட்டத்தூர் ஒய்காப் மேல்நிலைப் பள்ளியில் பட்டதாரி ஆசிரியராக பணியாற்றி வரும் முனைவர் மா.பாபுசெல்வத்துரை விழுப்புரம் மாவட்ட ஜூனியர் ரெட் கிராஸ் அமைப்பின் மாவட்ட ஜே.ஆர்.சி. கன்வீனராக கொரோனா காலத்திலும் சிறப்பாக பணியாற்றிய இவருக்கு இந்த 75-வது சுதந்திர தின விழாவில் அவரது பணியை பாராட்டி மாவட்ட ஆட்சியர் மோகன் நற்சான்று வழங்கினார். அப்போது மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்ரீநாதா, மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் கிருஷ்ணபிரியா, மாவட்ட வருவாய் அலுவலர் பரமேஸ்வரி உட்பட பலர் உடனிருந்தனா்.
அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2