/* */

விழுப்புரம் மாவட்டத்தில் இரவு ஊரடங்கு: தீவிரமாக கண்காணித்த போலீசார்

விழுப்புரம் மாவட்டத்தில் நேற்று இரவு 10 மணி முதல் ஆறு மணி வரை கொரோனா கட்டுபாட்டு ஊரடங்கு அமலானது.

HIGHLIGHTS

விழுப்புரம் மாவட்டத்தில் இரவு ஊரடங்கு: தீவிரமாக கண்காணித்த போலீசார்
X

இரவில் செயல்பட்ட கடைகளுக்கு அபராதம் விதிக்கப்பட்டது. 

தமிழகத்தில் கொரோனோ பரவலை கட்டுப்படுத்தும் வகையில், தமிழக அரசு, இரவு 10 மணி முதல், காலை 6 மணி வரை இரவு நேர ஊரடங்கு அமல்படுத்த உத்தரவு பிறப்பித்துள்ளது. இதனை தொடர்ந்து விழுப்புரம் மாவட்டத்தில் நேற்று 6 ந்தேதி புதன்கிழமை இரவு 10 மணி முதல், இரவு நேர ஊரடங்கு அமலுக்கு வந்தது.

இதனையடுத்து மாவட்ட கலெக்டர் மோகன், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்ரீ நாதா ஆகியோர் அதிகாரிகளுடன் விழுப்புரம் நகராட்சி பகுதியில் புதிய பேருந்து நிலையம், திருச்சி சென்னை நெடுஞ்சாலை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் நேரில் சென்று ஆய்வு செய்தனர்.

அப்போது இரவு 10 மணி தாண்டி செயல்பட்ட சில தனியார் உணவகங்கள் மற்றும் கடைகளுக்கு ரூ.1000 முதல் 2500 வரை அபராதம் விதித்தனர். நேற்றிரவு, மாவட்டத்தில் சுமார் 65 இடங்களில ஆயிரத்துக்கும் மேற்பட்ட காவல்துறையினர் தணிக்கையில் ஈடுபட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Updated On: 7 Jan 2022 12:45 AM GMT

Related News

Latest News

  1. திருத்தணி
    குடிதண்ணீர் வழங்காததை கண்டித்து கிராம மக்கள் சாலை மறியல்!
  2. நாமக்கல்
    நாமக்கல் உழவர் சந்தையில் இன்றைய காய்கறி மற்றும் பழங்கள் விலை நிலவரம்
  3. நாமக்கல்
    EVM அறைகளை கண்காணிக்க கூடுதலாக 10 சிசிடிவி கேமராக்கள்!
  4. வந்தவாசி
    கோடைகால விழிப்புணர்வு நிகழ்ச்சிகள்!
  5. திருவண்ணாமலை
    கூட்டாய்வுக்கு உட்படுத்தாத வாகனங்களுக்கு அனுமதி இல்லை, கலெக்டர்...
  6. லைஃப்ஸ்டைல்
    சமையலுக்கு ஏற்ற சிறந்த எண்ணெய் எது தெரியுமா?
  7. கோவை மாநகர்
    சவுக்கு சங்கர் நீதிமன்ற காவலில் கோவை சிறையில் அடைப்பு
  8. லைஃப்ஸ்டைல்
    டெல்லிக்கு ராசானாலும் பாட்டி சொல்லை தட்டாதே!
  9. லைஃப்ஸ்டைல்
    வணக்கம்... பலமுறை சொன்னேன், சபையினர் முன்னே! - தமிழில் காலை வணக்கம்...
  10. வீடியோ
    தமிழ்நாடு கெட்டு போனதுக்கு காரணம் சினிமா தான்! #mysskin| #hinduTemple|...