/* */

வீடுர் அணையில் இருந்து பாசனத்திற்கு தண்ணீர் திறப்பு

திண்டிவனம் அடுத்த வீடுர் அணையில் இருந்து அமைச்சர் மஸ்தான் பாசனத்திற்காக தண்ணீர் திறந்து வைத்தார்.

HIGHLIGHTS

வீடுர் அணையில் இருந்து பாசனத்திற்கு தண்ணீர் திறப்பு
X

வீடூர் அணையிலிருந்து விவசாய பாசனத்திற்காக சிறுபான்மையினர் நலன் மற்றும் வெளிநாடுவாழ் தமிழர் நலத்துறை அமைச்சர் செஞ்சி கே.எஸ்.மஸ்தான் தண்ணீர் திறந்து வைத்தார். 

விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம் வட்டம், மயிலம் தொகுதிக்கு உட்பட்ட வீடூர் அணையிலிருந்து விவசாய பாசனத்திற்காக சிறுபான்மையினர் நலன் மற்றும் வெளிநாடுவாழ் தமிழர் நலத்துறை அமைச்சர் செஞ்சி கே.எஸ்.மஸ்தான் மலர் தூவி தண்ணீர் திறந்து வைத்தார்.

இதனால், விழுப்புரம் மாவட்டம் உள்பட தமிழகப் பகுதிகளில் 2,200 ஏக்கா் விளைநிலங்கள், புதுவை மாநிலத்தில் 1,000 ஏக்கா் விளைநிலங்கள் என மொத்தம் 3,200 ஏக்கா் நிலங்கள் பாசன வசதி பெறும். தற்போது அணையிலிருந்து ஒருபோக பாசனத்துக்காக (போதிய அளவு தண்ணீா் இருக்கும் வரை) 135 நாள்களுக்கு தண்ணீா் திறந்துவிடப்படுகிறது.

அணையிலிருந்து திறந்துவிடப்பட்ட தண்ணீரால் தமிழகப் பகுதியான வீடூா், சிறுவை, பொம்பூா், பொன்னம்பூண்டி, கோரக்கேணி, ஐவேலி உள்ளிட்ட 11 கிராமங்களும், புதுவை மாநிலத்தில் 5 கிராமங்களும் பயன்பெறும் என தெரிவித்தார்.

மாவட்ட ஆட்சித்தலைவர் த.மோகன், விக்கிரவாண்டி சட்டமன்ற உறுப்பினர் நா.புகழேந்தி, விழுப்புரம் சட்டமன்ற உறுப்பினர் டாக்டர் இரா.இலட்சுமணன், மயிலம் சட்டமன்ற உறுப்பினர் ச.சிவக்குமார், மாவட்ட ஊராட்சிக் குழுத் தலைவர் ம.ஜெயச்சந்திரன் ஆகியோர் உட்பட பலர் உடனிருந்தனா்.

Updated On: 14 Jan 2022 4:46 PM GMT

Related News

Latest News

  1. நாமக்கல்
    வெளியில் செல்வதை தவிர்க்க நாமக்கல் மாவட்ட ஆட்சியர் உமா வேண்டுகோள்
  2. ஆன்மீகம்
    அன்பின் வடிவமாக எளிமையின் சின்னமாக இருப்பவர் சாய் பாபா..!
  3. சோழவந்தான்
    அலங்காநல்லூரில் அ.தி.மு.க. சார்பில் திறக்கப்பட்ட நீர்மோர் பந்தல்
  4. திருவள்ளூர்
    புழல் ஊராட்சி ஒன்றிய அலுவலத்தில் லஞ்ச ஒழிப்பு துறை போலீசார் சோதனை
  5. மாதவரம்
    வண்ண மீன் ஏற்றுமதி நிறுவனத்தை முற்றுகையிட்டு பொதுமக்கள் சாலை மறியல்
  6. நாமக்கல்
    சுத்தமான இறைச்சி மட்டுமே பயன்படுத்த நாமக்கல் மாவட்ட ஆட்சியர்...
  7. வீடியோ
    பெயிலில் வெளியே சுத்தும் ராகுல் மற்றும் சோனியா காந்தி !#Rsrinivasan...
  8. மேலூர்
    மதுரை மக்களிடம் விடைபெற்று பூப்பல்லக்கில் மலைக்கு புறப்பட்டார்...
  9. லைஃப்ஸ்டைல்
    நிறம் மாறும் மனிதர்கள்..! ஆபத்தானவர்கள்..!
  10. குமாரபாளையம்
    குடிநீரை சிக்கனமாக பயன்படுத்த குமாரபாளையம் நகராட்சி ஆணையர் வேண்டுகோள்