/* */

செஞ்சி ராஜகிரி கோட்டையில் சாமி சிலை உடைப்பு: மர்ம நபர்களுக்கு போலீஸ் வலைவீச்சு

Crime Investigation - விழுப்புரம் மாவட்டம், செஞ்சி ராஜகிரி கோட்டையில் உள்ள கோயிலில் சாமி சிலைகள் உடைக்கப்பட்டதால் அப்பகுதியில் பதற்றம் ஏற்பட்டுள்ளது.

HIGHLIGHTS

செஞ்சி ராஜகிரி கோட்டையில் சாமி சிலை உடைப்பு: மர்ம நபர்களுக்கு போலீஸ் வலைவீச்சு
X

மர்ம நபர்களால் சேதப்படுத்தப்பட்ட கமலக்கண்ணி சிலை.

Crime Investigation - விழுப்புரம் மாவட்டம், செஞ்சியில் ராஜகிரி மற்றும் கிருஷ்ணகிரி கோட்டைகள் உள்ளன. இதில் ராஜகிரி கோட்டையின் மேல் பகுதியில் பிரசித்தி பெற்ற கமலக்கண்ணி அம்மன் கோவில் அமைந்துள்ளது. சுதந்திர தினமான நேற்று வழக்கம் போல் பூசாரி ராமச்சந்திரன் பூஜை செய்வதற்காக வந்தார்.

அப்போது, அங்கிருந்த கமலக்கண்ணி அம்மன் சிலையின் கை மற்றும் கால்கள் உடைக்கப்பட்டு இருந்தது. இதை பார்த்து அதிர்ச்சியடைந்த அவர், அறங்காவலர் அரங்க ஏழுமலை மற்றும் கோட்டை அலுவலகருக்கு தகவல் தெரிவித்தார். அவர்கள் அங்கு வந்து பார்த்தனர். நேற்று முன்தினம் நள்ளிரவு மர்ம நபர்கள் கோவிலுக்குள் வந்து சிலையின் கை மற்றும் கால்களை உடைத்து சேதப்படுத்தி சென்று இருப்பது தெரியவந்தது.

சம்பவம் குறித்து அறிந்த செஞ்சி பீரங்கி மேடு பகுதி மக்கள் செஞ்சி கோட்டைக்கு திரண்டு வந்து, அங்கிருந்த கோட்டை அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது அவர்கள் சிலையை சேதப்படுத்தியவர்களை கண்டறிந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தினர். போலீசில் புகார் அளித்து நடவடிக்கை எடுப்பதாக அதிகாரிகள் தெரிவித்ததை அடுத்து அவர்கள் கலைந்து சென்றனர்.

இது தொடர்பாக அறங்காவலர் அரங்க ஏழுமலை மற்றும் செஞ்சி கோட்டை அலுவலர் நவீந்திராரெட்டி ஆகியோர் செஞ்சி போலீசில் புகார் செய்தனர். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்ம நபர்கள் குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர், இந்த சம்பவத்தால் அப்பகுதியில் பெரும் பதற்றம் நிலவி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.


அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2

Updated On: 16 Aug 2022 11:05 AM GMT

Related News

Latest News

  1. நாமக்கல்
    நாமக்கல் மாவட்டத்தில் பிளஸ் 1 தேர்வில் 92.58 சதவீதம் மாணவர்கள்...
  2. சோழவந்தான்
    உலக நன்மைக்காகவும் மழை வேண்டியும் சோழவந்தானில் யாகம்..!
  3. திருத்தணி
    சரக்கு வாகன ஓட்டுனரை வெட்டி வழிப்பறியில் ஈடுபட்ட கொள்ளையன் கைது
  4. சோழவந்தான்
    சோழவந்தான் திரௌபதியம்மன் ஆலயத்தில் திருக்கல்யாண விழா..!
  5. நத்தம்
    நத்தம் பகவதி அம்மன் திருவிழா: காப்புக்கட்டுடன் தொடங்கியது..!
  6. கோவை மாநகர்
    காந்திபுரத்தில் பேருந்து மோதி தொழிலாளி பலி..!
  7. லைஃப்ஸ்டைல்
    எனக்கு தாலாட்டு பாடிய 'இரண்டாம் தாய்' அக்காவுக்கு பிறந்தநாள்...
  8. லைஃப்ஸ்டைல்
    ஆசையுடன் அப்பாவுக்கு பிறந்தநாள் வாழ்த்து..!
  9. வீடியோ
    Bhagyaraj மருமகளுடன் குத்தாட்டம் போட்ட Gayathri Raghuram ! #dance...
  10. லைஃப்ஸ்டைல்
    ரமலான் வாழ்த்துச் சொல்வோம் வாங்க..!