/* */

வீட்டின் பூட்டை உடைத்து, பணம் நகைகளை திருடி சென்ற மர்ம நபர்கள்

வீட்டின் பூட்டை உடைத்து பணம் நகைகளை திருடி சென்ற மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்

HIGHLIGHTS

வீட்டின் பூட்டை உடைத்து, பணம் நகைகளை திருடி சென்ற மர்ம  நபர்கள்
X

வந்தவாசி அருகே வீரம்பாக்கம் புதூர் கிராமத்தைச் சேர்ந்தவர் பஷீர் ( 44), இவர் தனது வீட்டின் அருகில் மளிகை கடை நடத்தி வருகிறார்.

இவர் தனது வீடு, கடையை பூட்டி விட்டு நேற்று இரவு குடும்பத்தினருடன் வெளியூர் சென்றார். இந்த நிலையில் இன்று காலை பஷீர் வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு இருந்ததை பார்த்து அக்கம்பக்கத்தில் உள்ள உறவினர்கள் அதிர்ச்சி அடைந்தனர். இதுகுறித்து வந்தவாசி வடக்கு போலீசாருக்கும், பஷீருக்கும் அவர்கள் தகவல் தெரிவித்தனர்.

அதன்பேரில் வந்தவாசி துணை போலீஸ் சூப்பிரண்டு கார்த்திக், இன்ஸ்பெக்டர் விஸ்வநாதன், சப்-இன்ஸ்பெக்டர் மோகன் மற்றும் போலீசார் விரைந்து சென்று விசாரணை நடத்தினர்.அப்போது வீட்டின் பூட்டை உடைத்து உள்ளே சென்ற மர்ம நபர்கள் பீரோவில் வைக்கப்பட்டிருந்த 22 கிராம் தங்க நகை மற்றும் ரூ.20 ஆயிரத்தை திருடி சென்றது தெரிய வந்தது.இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து நகை, பணத்தை திருடி சென்ற மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.

Updated On: 11 Aug 2022 2:38 PM GMT

Related News

Latest News

  1. செய்யாறு
    செய்யாறு அரசு பாலிடெக்னிக் கல்லூரியில் மாணவர் சேர்க்கைக்கு...
  2. திருவண்ணாமலை
    கார் விபத்தில் சிக்கிய அமைச்சரின் மகன்: போலீசார் விசாரணை
  3. நாமக்கல்
    நாமக்கல்லில் இன்னுயிர் காப்போம் திட்டம்: 6,568 பேருக்கு ரூ. 4.73 கோடி...
  4. நாமக்கல்
    நாமக்கல் உழவர் சந்தையில் இன்றைய காய்கறி, பழங்கள் விலை நிலவரம்
  5. திருவண்ணாமலை
    திருவண்ணாமலையில் இயற்கை உணவு திருவிழா
  6. லைஃப்ஸ்டைல்
    வீட்டிலேயே வலி நிவாரணி எண்ணெய் தயாரிப்பது எப்படி?
  7. லைஃப்ஸ்டைல்
    வெறும் வயிற்றில் கற்றாழை சாறு அருந்துவதால் கிடைக்கும் நன்மைகள் பற்றி...
  8. ஆன்மீகம்
    பழனியில் வரும் ஆகஸ்ட் மாதத்தில், உலக முருக பக்தர்கள் மாநாடு
  9. லைஃப்ஸ்டைல்
    பெண்களுக்கு 7 மணி நேர தூக்கம் போதுமா..? ஆய்வு என்ன சொல்லுது?
  10. லைஃப்ஸ்டைல்
    இரவில் சாப்பிடுவதால் உடல் பருமனை அதிகரிக்கும் 5 உணவுகள் என்னென்ன...