/* */

வந்தவாசி: ஓய்வுபெற்ற வீட்டுவசதி வாரிய சங்க செயலாளர் தற்கொலை

மனோகரன் வந்தவாசி வீட்டுவசதி வாரியத்தில் சங்க செயலாளராக பணியாற்றி கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு ஓய்வு பெற்றார்.

HIGHLIGHTS

வந்தவாசி: ஓய்வுபெற்ற வீட்டுவசதி வாரிய சங்க செயலாளர் தற்கொலை
X

மனோகரன்.

வந்தவாசி கேசவாநகர் பகுதியைச் சேர்ந்தவர் மனோகரன் (வயது 59). இவருக்கு பிரியாகாருண்யா என்ற மனைவியும், பத்மபிரபன் என்ற மகனும் உள்ளனர். மனோகரன் வந்தவாசி வீட்டுவசதி வாரியத்தில் சங்க செயலாளராக பணியாற்றி கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு ஓய்வு பெற்றார்.

அவருக்கு பி.எப். பணம் ரூ.30 லட்சம் கிடைக்கவில்லை எனக் கூறப்படுகிறது. இதனால் அவர் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார். வழக்கு நிலுவையில் உள்ளது. இந்நிலையில், மனமுடைந்த மனோகரன் இன்று வீட்டில் சேலையால் மின் விசிறியில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

அவரின் மனைவி மற்றும் மகன் தூக்கில் இருந்து மனோகரனை மீட்டு வந்தவாசி அரசு மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். அங்கு, அவரை பரிசோதித்த மருத்துவர்கள், மனோகரன் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். பிரேதப் பரிசோதனைக்கு அவரின் உடலை அனுப்பி வைத்தனர். மகன் பத்மபிரபன் கொடுத்த புகாரின் பேரில் வந்தவாசி தெற்குப் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Updated On: 11 March 2022 2:11 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    அலைகளற்ற ஆழ்கடல், அப்பா..!
  2. லைஃப்ஸ்டைல்
    காதல் என்றால் ரொமான்ஸ் இல்லாமலா..?
  3. திருவண்ணாமலை
    சென்னையில் இருந்து திருவண்ணாமலைக்கு ரயில் சேவை துவக்கம்; மீண்டும்...
  4. லைஃப்ஸ்டைல்
    விழிகள் வழியே இதயம் தொட்ட உணர்வுகள்..!
  5. விளையாட்டு
    மார்க்ரம் ஏன் ஒதுக்கப்பட்டார்? சன்ரைசர்ஸ் ஹைதராபாத்தின் முடிவு சரியா?
  6. இந்தியா
    சூரத் பொது யோகா பயிற்சியில் 7000-க்கும் மேற்பட்ட யோகா ஆர்வலர்கள்
  7. பல்லடம்
    பல்லடத்தில் மாவட்ட அளவிலான கைப்பந்து போட்டி
  8. வீடியோ
    மதமாற துன்புறுத்தப்பட்ட பெண் | Fadnavis செய்த அதிர்ச்சி சம்பவம்|...
  9. இந்தியா
    ஐநா நிகழ்ச்சியில் பங்கேற்கும் இந்திய பெண் பிரதிநிதிகள்
  10. காங்கேயம்
    வெள்ளகோவில்; கோழிக்கடையில் ரூ. 50 ஆயிரம் திருடியவா் கைது