/* */

கரும்பு டன் ஒன்றுக்கு ரூ.5 ஆயிரம் விலை நிர்ணயம்: விவசாயிகள் கோரிக்கை

கரும்பு டன் ஒன்றுக்கு ரூ.5 ஆயிரம் விலை நிர்ணயம் செய்ய வேண்டும் விவசாயிகள் சங்க மாநாட்டில் தீர்மானம் நிறைவற்றப்பட்டது

HIGHLIGHTS

கரும்பு டன் ஒன்றுக்கு ரூ.5 ஆயிரம் விலை நிர்ணயம்:  விவசாயிகள் கோரிக்கை
X

திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசியில் தமிழ்நாடு கரும்பு விவசாயிகள் சங்க மாநாடு, சங்க தலைவர் பெருமாள் தலைமையில் நடைபெற்றது.

கூட்டத்தில் கரும்பு டன் ஒன்றுக்கு ரூ.5 ஆயிரம் விலை நிர்ணயம் செய்ய வேண்டும். பெட்ரோல், டீசலுடன் 50 சதவீத எத்தனால் கலந்திட நடவடிக்கை எடுக்க வேண்டும். வெளி நாட்டு சர்க்கரை இறக்குமதிக்கு அனுமதி அளித்துவிட்டு உள்நாட்டு சர்க்கரை விலையை குறைக்கக் கூடாது. 2021 அரவை பருவத்திற்கான பணத்தை உடனே வழங்க வேண்டும்.

கரும்பு வெட்டும் கூலியை ஆலை நிர்வாகம் வழங்க வேண்டும், கரும்பு வெட்டுவதற்கு ஆட்களை ஒப்பந்த அடிப்படையில் ஏற்பாடு செய்யவேண்டும், அரவை பருவம் தொடங்குவதற்கு முன்பாக முத்தரப்பு கூட்டத்தை கூட்ட வேண்டும் என்பது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

இந்த மாநாட்டில் தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்ட தலைவர் டி.கே.வெங்கடேசன், தமிழ்நாடு கரும்பு விவசாயிகள் சங்க மாநிலக்குழு உறுப்பினர் பலராமன், தமிழ்நாடு விவசாய சங்க மாவட்ட துணை தலைவர் ராதாகிருஷ்ணன் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

Updated On: 28 Oct 2021 6:51 AM GMT

Related News

Latest News

  1. நாமக்கல்
    வெங்காய ஏற்றுமதிக்கான தடை நீக்கம்: மத்திய அரசு திடீர் அறிவிப்பு
  2. நாமக்கல்
    வெளிநாட்டு வேலை வாய்ப்புக்கான போலி விளம்பரங்கள் குறித்து கலெக்டர்...
  3. ஈரோடு
    கோபி வெங்கடேஸ்வரா கல்வி நிறுவனங்களில் படித்த 603 மாணவர்களுக்கு பணி...
  4. லைஃப்ஸ்டைல்
    வாழ்க்கைன்னா என்னங்க ..? எப்படி வாழலாம்..?
  5. லைஃப்ஸ்டைல்
    ஸ்ரீ கிருஷ்ணரின் ஞான வார்த்தைகள் !
  6. லைஃப்ஸ்டைல்
    மே 24 ! தேசிய சகோதரர்கள் தினம். கொண்டாடலாம் வாங்க
  7. லைஃப்ஸ்டைல்
    அன்பு தம்பிகளுக்கு அண்ணாவின் பொன்மொழிகள்
  8. வீடியோ
    🔥 Delhi-யில் அடித்த Annamalai அலை!😳 மிரண்டுபோன BJP தலைமை |...
  9. லைஃப்ஸ்டைல்
    தன்னம்பிக்கை அளித்து ஊக்கமளிக்கும் பாசிடிவ் மேற்கோள்கள்
  10. லைஃப்ஸ்டைல்
    50 சிறந்த மகளிர் தின வாழ்த்துச் செய்திகள்!