/* */

வந்தவாசி அருகே விஷ பூச்சி கடித்து பள்ளி மாணவி பரிதாப உயிரிழப்பு

Tiruvannamalai News- வந்தவாசி அருகே விஷ பூச்சி கடித்து பள்ளி மாணவி பரிதாபமாக உயிரிழந்த சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

HIGHLIGHTS

tiruvannamalai news
X

விஷ பூச்சி கடித்து  பரிதாபமாக உயிரிழந்த பள்ளி மாணவி அனுஷ்கா

Tiruvannamalai News -திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசியை அடுத்துள்ள கீழ்குவளைவேடு கிராமத்தை சேர்ந்தவர் சிவலிங்கம். அவரது மனைவி சுகாசினி. இவர்களுக்கு ஒரு மகளும், மகனும் உள்ளனர். மகள் அனுஷ்கா (வயது 9) கீழ்குவளைவேடு கிராமத்தில் உள்ள அரசு தொடக்கப்பள்ளியில் 3-ம் வகுப்பு படித்து வந்தாள்.

அனுஷ்கா இரவு சாப்பிட்டு விட்டு பெற்றோருடன் வீட்டுக்கு வெளியே படுத்து தூங்கினாள். நள்ளிரவில் அனுஷ்காவை விஷ பூச்சி கடித்ததாக தெரிகிறது.

tiruvannamalai today live news

இதனால் மாணவி வாயில் நுரை தள்ளியபடி துடித்துக் கொண்டிருந்தாள். அவளை மீட்டு சிகிச்சைக்காக வந்தவாசி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவளுக்கு தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி மாணவி அனுஷ்கா பரிதாபமாக உயிரிழந்தாள்.

இதுகுறித்து வந்தவாசி வடக்கு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2

Updated On: 1 Jun 2022 10:06 AM GMT

Related News

Latest News

  1. வணிகம்
    சென்னையில் பிரமாண்டமான தாஜ் வீடுகள் விலை தெரியுமா...?
  2. உசிலம்பட்டி
    கனமழை..! சதுரகிரிமலைக்கு செல்ல பக்தர்களுக்கு தடை..!
  3. கல்வி
    அரசின் சான்றிதழ் பெற என்னென்ன ஆவணங்கள் வேணும்..? பள்ளி...
  4. சோழவந்தான்
    அலங்காநல்லூர் அருகே கோடைகால கபாடி பயிற்சி..!
  5. லைஃப்ஸ்டைல்
    அன்பின் அணையா விளக்கு, அம்மா..! அன்னையர் தின வாழ்த்து..!
  6. லைஃப்ஸ்டைல்
    அன்னையின் அன்புக்கு அளவீடு இங்கில்லை..! அம்மாவை வணங்குவோம்..!
  7. லைஃப்ஸ்டைல்
    வயசே தெரியாம பிறந்தநாள் கொண்டாடும் நண்பா..வாழ்த்துகள்..!
  8. ஆன்மீகம்
    விண்ணின் தேவன் மண்ணில் பிறந்த நாள்..! கிறிஸ்துமஸ் வாழ்த்துகள்..!
  9. லைஃப்ஸ்டைல்
    பொங்கலோ..பொங்கல்..! இனிக்கும் பொங்கல் வாழ்த்து..!
  10. வீடியோ
    🔴LIVE: Saattai அலுவலக திறப்பு விழாவில் சீமான் செய்தியாளர்கள்...