Begin typing your search above and press return to search.
வந்தவாசியில் லாரி மீது ஸ்கூட்டி மோதல்; அங்கன்வாடி அமைப்பாளர் சாவு
வந்தவாசியில் லாரி மீது ஸ்கூட்டி மோதியதில் அங்கன்வாடி அமைப்பாளர் உயிரிழந்தார்.
HIGHLIGHTS
திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி கே.வி.டி.நகர் பகுதியை சேர்ந்தவர் குடியரசு. இவரின் மனைவி மோகனா (வயது 48), வந்தவாசி கே.வி.டி. நகர் பகுதி மையத்தில் அங்கன்வாடி அமைப்பாளராக பணியாற்றி வந்தார். நேற்று மாலை மோகனாவும், குடியரசும் ஸ்கூட்டியில் வந்தவாசியில் வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் உள்ள அங்கன்வாடி அலுவலகத்துக்கு சென்றுவிட்டு, மேல்மருவத்தூர் சாலையில் வந்து கொண்டிருந்தனர்.
அப்போது, நெல் மூட்டைகளை ஏற்றிக்கொண்டு லாரி சென்று கொண்டிருந்த லாரியின் பின்பக்கம், அவர்கள் சென்ற ஸ்கூட்டி மோதியது. அதில் மோகனா கீழே விழுந்தார். அவரை, மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு சிகிச்சை பலனின்றி மோகனா பரிதாபமாக உயிரிழந்தார். விபத்து குறித்து, வந்தவாசி தெற்கு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். லாரி டிரைவர் ஆனந்த்ராஜ் கைது செய்யப்பட்டார்.