/* */

விவசாய நிலங்களில் மழைநீர் புகுந்ததால் நெற்பயிர்கள் சேதம்

தொடர்ந்து பெய்து வரும் மழையால் வந்தவாசி அருகே விவசாய நிலங்களில் மழைநீர் புகுந்து நெற்பயிர்கள் சேதம் அடைந்ததுள்ளன

HIGHLIGHTS

விவசாய நிலங்களில் மழைநீர் புகுந்ததால் நெற்பயிர்கள் சேதம்
X

நெல்வயலில் தேங்கி நிற்கும் வெள்ளநீர்

வந்தவாசி பகுதியில் பொதுப்பணித்துறைக்கு சொந்தமான 91 ஏரிகள் உள்ளன. தொடர்ந்து பெய்து வரும் மழையால் வந்தவாசி நகர பயணியர் விடுதி எதிரே உள்ள ஏரி, உளுந்தை கிராம பெரிய ஏரி, சித்தேரி, பாதூர் கிராம சித்தேரி, பெரிய ஏரி, ஓசூர் கிராம பூதேரி, அமுடூர் மற்றும் படூர் கிராம காட்டேரி, பெரிய ஏரி, சித்தேரி உள்பட 79 ஏரிகள் 75 சதவீதம் முதல் 80 சதவீதம் வரை நிரம்பி உள்ளது.

பல ஏரிகள் நிறைந்து சாலைகளில் நீர் பெருக்கெடுத்து ஓடுகிறது. இதனால் ஓசூர் பூதேரி நிறைந்து சாலையின் குறுக்கே ஓடுவதால் மூடூர் உள்ளிட்ட கிராம மக்கள் வெளியே வரமுடியாமல் தவித்து வருகின்றனர்.

தொடர் மழையையொட்டி ஸ்ரீரங்கராஜபுரம், கொடநல்லூர், கீழ்கொவளைவேடு உள்ளிட்ட இடங்களில் நெல்வயல்கள் நீரில் மூழ்கி சேதம் அடைந்துள்ளதால் விவசாயிகள் கவலையடைந்துள்ளனர்.

இது குறித்து அரசு அதிகாரிகள் சேதங்களை பார்வையிட்டு சென்றுள்ளனர். சேதமடைந்த பயிர்களுக்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்

Updated On: 28 Nov 2021 1:27 PM GMT

Related News

Latest News

  1. திருப்பூர்
    திருப்பூருக்கு முதலிடம் கிடைக்குமா? - பிளஸ் 2 தேர்வு முடிவு நாளை...
  2. உடுமலைப்பேட்டை
    மழை வேண்டி வன தேவதைகளுக்கு விழா எடுத்த மலைவாழ் மக்கள்
  3. லைஃப்ஸ்டைல்
    அலட்சியம்: தோல்விக்கான பாதையை நோக்கிய ஒரு பயணம்
  4. நாமக்கல்
    நாமக்கல்லில் 11 மையங்களில் நீட் தேர்வு 6,180 பேர் பங்கேற்பு: 120 பேர்...
  5. கவுண்டம்பாளையம்
    தடாகம் பகுதியில் 12 கிலோ கஞ்சா பறிமுதல் ; இருவர் கைது
  6. லைஃப்ஸ்டைல்
    மின்விசிறியா அல்லது காற்றூதியா? மின்சாரம் சேமிப்பது எது?
  7. காங்கேயம்
    சிறுமிக்கு பாலியல் தொல்லை; குண்டா் சட்டத்தில் 8 போ் கைது
  8. நாமக்கல்
    நாமக்கல்லில் முட்டை விலை உயர்வு!
  9. மேட்டுப்பாளையம்
    அன்னூரில் மழை வேண்டி கழுதைகளுக்கு திருமணம் செய்து வைத்த கிராம மக்கள்
  10. திருப்பூர்
    திருப்பூர்; மாணவா்களுக்கு கோடைகால கலைப் பயிற்சி முகாம்