/* */

சாலை மேம்பாட்டு பணிகளை நெடுஞ்சாலைத்துறை தலைமை பொறியாளர் ஆய்வு

வந்தவாசி பகுதியில் நடந்து வரும் சாலை மேம்பாட்டு பணிகளை நெடுஞ்சாலைத்துறை தலைமை பொறியாளர் ஆய்வு செய்தார்.

HIGHLIGHTS

சாலை மேம்பாட்டு பணிகளை நெடுஞ்சாலைத்துறை தலைமை பொறியாளர் ஆய்வு
X

வந்தவாசி பகுதியில் நடந்து வரும் சாலை மேம்பாட்டு பணிகளை நெடுஞ்சாலைத்துறை தலைமைப் பொறியாளர் எம்.கே.செல்வன் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

சென்னை-கன்னியாகுமரி தொழிற்தட திட்டத்தின் கீழ் காஞ்சீபுரம் மாவட்டம் செய்யூரில் இருந்து மேல்மருவத்தூர், வந்தவாசி, சேத்துப்பட்டு வழியாக போளூர் வரை 109 கிலோ மீட்டர் தொலைவில் ரூ.600 கோடி மதிப்பில் இருவழித்தட சாலையாக மேம்படுத்தும் பணிகள் கடந்த ஆண்டு தொடங்கி நடந்து வருகிறது.

அதில் 5 உயர்மட்ட பாலங்கள், 12 சிறு பாலங்கள், 214 வாய்க்கால் பாலங்கள், வந்தவாசி, சேத்துப்பட்டு, மருதாடு ஆகிய பகுதிகளில் புதிய புறவழிச் சாலைகள் அமைக்கப்பட்டு வருகிறது.

மேலும் அந்தச் சாலையையொட்டி உள்ள கிராமங்களின் இருபுறமும் மழைநீர் வடிகால் அமைக்கும் பணிகளும் நடந்து வருகிறது.

இந்தச் சாலைப் பணிகளை நெடுஞ்சாலைத்துறை தலைமைப் பொறியாளர் எம்.கே.செல்வன் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

அப்போது வந்தவாசியை அடுத்த சாலவேடு கிராமத்தில் மழைநீர் வடிகால் அமைக்கும் பணி, சிறுபாலங்கள் அமைக்கும் பணி ஆகியவற்றை பார்வையிட்டு சாலையின் தரத்தை ஆய்வு செய்தார். மேலும் ஒப்பந்த காலத்துக்குள் சாலைப் பணிகளை முடிக்குமாறு ஒப்பந்ததாரருக்கு உத்தரவிட்டார்.

ஆய்வின்போது திட்ட கோட்ட பொறியாளர் லட்சுமிகாந்தன், உதவிகோட்ட பொறியாளர்கள் எஸ்.பாஸ்கரன், அன்பரசி உள்பட பலர் உடனிருந்தனர்.

Updated On: 11 April 2022 6:51 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    போலி உறவுகளை காலி செய்யுங்கள்..! வேண்டாத சுமைகள்..!
  2. நாமக்கல்
    நாமக்கல்லில் முட்டை விலை விர்ர்ர்... 5 நாட்களில் 70 பைசா உயர்வு
  3. லைஃப்ஸ்டைல்
    வாழ்க்கை ஒரு நந்தவனம்..! ரசித்து வாழுங்கள்..!
  4. ஈரோடு
    ஈரோடு அட்வகேட் அசோசியேசன் புதிய நிர்வாகிகள் பதவியேற்பு
  5. வீடியோ
    பெரிய அளவில் பேரம் பேசிய Uddhav Thackeray | பொதுவெளியில் போட்டுடைத்த...
  6. வீடியோ
    🔴LIVE : சீனாவில் இருந்து வெளியேறும் கார்ப்பரேட்! ஆளுநர் RN.ரவி சூசக...
  7. ஈரோடு
    ஈரோடு அரசு பல்நோக்கு மருத்துவமனையில் வெப்ப நோய் சிகிச்சைக்கு சிறப்பு...
  8. லைஃப்ஸ்டைல்
    நட்சத்திரப்பழம் சாப்பிட்டு இருக்கீங்களா? தெரிஞ்சா விடமாட்டீங்க..!
  9. ஆன்மீகம்
    ‘அமைதியின் ஆழத்தில் மட்டும்தான் கடவுளின் குரல் கேட்கும்’ - பாபாவின்...
  10. லைஃப்ஸ்டைல்
    கேளுங்கள் கொடுக்கப்படும்; தட்டுங்கள் திறக்கப்படும் - கிறிஸ்துமஸ்...