/* */

விவசாயி வீட்டில் பட்டப்பகலில் பூட்டை உடைத்து 10 சவரன் நகை திருட்டு

வந்தவாசி அருகே விவசாயியின் வீட்டில் பட்டப்பகலில் பூட்டை உடைத்து 10 பவுன் நகைகளை திருடிச்சென்றவர்களை போலீசார் தேடி வருகின்றனர்.

HIGHLIGHTS

விவசாயி வீட்டில் பட்டப்பகலில் பூட்டை உடைத்து 10 சவரன் நகை திருட்டு
X

நகை திருட்டு நடந்த வீட்டில் கைரேகை நிபுணர்கள்  முக்கிய தடயங்களை சேகரித்தனர்.

திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசியை அடுத்த சத்யா நகர் பகுதியைச் சேர்ந்தவர் செல்வம். விவசாயி. இவர் கேரளாவில் உள்ள மகளை பார்த்து விட்டு மேல்மருவத்தூர் சென்றுவிட்டு நேற்று மாலை வீடு திரும்பினார்.

பின்னர் வீட்டின் எதிரே உள்ள விவசாய நிலத்திற்கு சென்றுவிட்டு திரும்பியபோது வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார். பின்னர் உள்ளே சென்று பார்த்தபோது பீரோவில் இருந்த 10 பவுன் நகைகளை மர்ம நபர்கள் திருடிச் சென்றது தெரியவந்தது.

இது குறித்து அவர் பொன்னூர் போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் மற்றும் கைரேகை நிபுணர்கள் சம்பவ இடத்திற்கு சென்று முக்கிய தடயங்களை சேகரித்தனர்.

இது தொடர்பாக நகைகளை திருடிச் சென்ற மர்ம நபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

Updated On: 25 May 2022 6:43 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    சமையலுக்கு ஏற்ற சிறந்த எண்ணெய் எது தெரியுமா?
  2. கோவை மாநகர்
    சவுக்கு சங்கர் நீதிமன்ற காவலில் கோவை சிறையில் அடைப்பு
  3. லைஃப்ஸ்டைல்
    டெல்லிக்கு ராசானாலும் பாட்டி சொல்லை தட்டாதே!
  4. லைஃப்ஸ்டைல்
    வணக்கம்... பலமுறை சொன்னேன், சபையினர் முன்னே! - தமிழில் காலை வணக்கம்...
  5. வீடியோ
    தமிழ்நாடு கெட்டு போனதுக்கு காரணம் சினிமா தான்! #mysskin| #hinduTemple|...
  6. வீடியோ
    நீங்க ஒன்னும் எனக்கு Advice பண்ண வேண்டாம்!...
  7. லைஃப்ஸ்டைல்
    நாம் யார் என்பதை உணர்ந்தால் அதுவே நமக்கான பாத்திரம்..!
  8. லைஃப்ஸ்டைல்
    நமக்கான சண்டையில் கூட உன்னிடம் தோற்பதை ரசிக்கிறேன்..! கணவனின்...
  9. வீடியோ
    கோவிலுக்கு போகமா தருதலையா சுத்தறதா? மிஷ்கினை வச்சி செய்த பெரியவர்!...
  10. வீடியோ
    ராகவா லாரன்ஸ்-ஐ புகழ்ந்து தள்ளிய சூப்பர் ஸ்டார் | #ragavalawrence |...