/* */

ரூ. 31 கோடி வளர்ச்சி திட்ட பணிகளை திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் ஆய்வு

திருவண்ணாமலை நகராட்சி ஊராட்சி ஒன்றியப் பகுதிகளில் ரூ/ 31 கோடி வளர்ச்சி திட்டப் பணிகளை ஆட்சியர் பார்வையிட்டு ஆய்வு செய்தார்

HIGHLIGHTS

ரூ. 31 கோடி வளர்ச்சி திட்ட  பணிகளை திருவண்ணாமலை  மாவட்ட ஆட்சியர் ஆய்வு
X

திருவண்ணாமலை ஈசானிய மைதானம் அருகில் புதிதாக கட்டப்பட்டு வரும் நகர்புற சுகாதார மையத்தினை மாவட்ட ஆட்சியர் ஆய்வு செய்தார்.

திருவண்ணாமலை நகராட்சி மற்றும் ஊரக பகுதிகளில் பல்வேறு வளர்ச்சி திட்ட பணிகள் நடைபெற்று வருகின்றன. திருவண்ணாமலை ஒன்றியத்திற்கு உட்பட்ட குன்னியந்தல் - வள்ளிவாகை சாலையில் ரூ.1 கோடியே 25 லட்சம் மதிப்பில் சிறுபாலம், திரும்ப கட்டும் பணி நடைபெற்று வருகிறது. இதனை கலெக்டர் முருகேஷ், நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

தொடர்ந்து திருவண்ணாமலை - திண்டிவனம் சாலை சந்திப்பில் தேசிய நெடுஞ்சாலையில் ரூ.21 கோடியே 47 லட்சம் மதிப்பில் சாலை மேம்பாலம் கட்டும் பணி நடைபெற்று வருவதையும் பார்வையிட்டு ஆய்வு செய்து இந்த பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்.

மேலும் நெடுஞ்சாலை துறை சார்பில் ரூ.5 கோடியே 53 லட்சம் மதிப்பில் கடலூர்-திருவண்ணாமலை- சித்தூர் மாநில நெடுஞ்சாலையில் மேம்பாட்டு பணி நடைபெற்று வருவதை பார்வையிட்ட அவர் திருவண்ணாமலை நகராட்சி அலுவலகத்தில் கலைஞர் நகர்ப்புற மேம்பாட்டு திட்டத்தின் கீழ் அறிவு சார் மையம் ரூ.1 கோடியே 99 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டு வரும் பணியினையும், திருவண்ணாமலை நகராட்சியில் செயல்பட்டு வரும் கழிவு நீர் சுத்திகரிப்பு நிலையத்தின் செயல்பாடுகள் குறித்தும் ஆய்வு செய்தார்.

பின்னர் திருவண்ணாமலை நகராட்சியில் உள்ள கால்நடை பராமரிப்புத்துறை அலுவலகத்தை பார்வையிட்ட அவர் செங்கம் சாலையில் நகர்ப்புற வாழ்வாதார மேம்பாட்டு நிதியின் கீழ் ரூ.50 லட்சம் மதிப்பில் கட்டப்பட்டு வரும் ஆதரவற்றோர்கள் தங்கும் இடத்தினையும், ஈசான்ய மைதானம் அருகில் 15-வது மத்திய நிதிக்குழு மானியத்தின் கீழ் புதிதாக கட்டப்பட்டு வரும் நகர்ப்புற சுகாதார மையத்தினையும் அவர் ஆய்வு செய்தார்.

அப்போது நெடுஞ்சாலைதுறை கோட்டப்பொறியாளர் முரளி, உதவி கோட்டப்பொறியாளர் கே.ரகுராமன், தேசிய நெடுஞ்சாலை உதவி கோட்டப்பொறியாளர் மஞ்சுளா, உதவி செயற்பொறியாளர் தனசேகரன், திருவண்ணாமலை நகராட்சி ஆணையர் பார்த்தசாரதி, கால்நடை பராமரிப்புத் துறை மண்டல இணை இயக்குனர் சோமசுந்தரம், நகர நல அலுவலர் மோகன், திருவண்ணாமலை தாசில்தார் சுரேஷ் மற்றும் துறை அலுவலர்கள் உடன் இருந்தனர்.

Updated On: 5 May 2022 3:12 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    அலட்சியம்: தோல்விக்கான பாதையை நோக்கிய ஒரு பயணம்
  2. நாமக்கல்
    நாமக்கல்லில் 11 மையங்களில் நீட் தேர்வு 6,180 பேர் பங்கேற்பு: 120 பேர்...
  3. கவுண்டம்பாளையம்
    தடாகம் பகுதியில் 12 கிலோ கஞ்சா பறிமுதல் ; இருவர் கைது
  4. லைஃப்ஸ்டைல்
    மின்விசிறியா அல்லது காற்றூதியா? மின்சாரம் சேமிப்பது எது?
  5. காங்கேயம்
    சிறுமிக்கு பாலியல் தொல்லை; குண்டா் சட்டத்தில் 8 போ் கைது
  6. நாமக்கல்
    நாமக்கல்லில் முட்டை விலை உயர்வு!
  7. மேட்டுப்பாளையம்
    அன்னூரில் மழை வேண்டி கழுதைகளுக்கு திருமணம் செய்து வைத்த கிராம மக்கள்
  8. திருப்பூர்
    திருப்பூர்; மாணவா்களுக்கு கோடைகால கலைப் பயிற்சி முகாம்
  9. ஈரோடு
    ஈரோட்டில் இன்று (மே.5) 5வது நாளாக 110 டிகிரிக்கு மேல் வெயில் பதிவு
  10. லைஃப்ஸ்டைல்
    ‘இலையுதிர்க்காலம் நிரந்தரம் அல்ல’