/* */

மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த வாலிபர் போக்சோ சட்டத்தில் கைது

பள்ளி மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த வாலிபரை போக்சோ சட்டத்தில் கைது செய்தனர். இவரது நண்பரை போலீசார் தேடி வருகின்றனர்

HIGHLIGHTS

மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த வாலிபர் போக்சோ சட்டத்தில் கைது
X

பைல் படம்

திருவண்ணாமலையில் உள்ள ஒரு அரசு பள்ளியில் 16 வயது இளம்பெண் பிளஸ் 2 படித்து வருகிறார். இவரை திருவண்ணாமலை அம்பேத்கர் தெருவை சேர்ந்த முத்துக்குமார் ( 21) என்பவர் காதலித்து வந்துள்ளார். ஆனால் அந்தப் பெண் அவரிடம் பேசுவதை தவிர்த்து உள்ளார்.

இதனால் முத்துக்குமார் ஆத்திரமடைந்தார். இந்த நிலையில் சம்பவத்தன்று அந்த மாணவி மற்றும் அவரது தாய் மற்றும் உறவினர் ஒருவர் ஆகியோர் அம்பேத்கர் தெரு பகுதியில் சென்று கொண்டிருந்தனர். அப்போது அங்கு வந்த முத்துக்குமார் மற்றும் அவரது நண்பர் ஆகியோர் சேர்ந்து அவர்களிடம் தகராறில் ஈடுபட்டனர். மேலும் மாணவியின் உறவினரை அவர்கள் அசிங்கமாக பேசி தாக்கினர். இதையடுத்து அந்த மாணவியை, முத்துக்குமார் கீழே தள்ளி தாக்கி அவருக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக கூறப்படுகிறது.

இதை தடுக்க வந்த மாணவியின் தாயாரையும் அவர்கள் ஆபாசமாக பேசினர். மேலும், அவரிடம் உனது மகளின் படத்தை ஆபாசமாக சித்தரித்து வெளியிடுவேன் என்றும் மிரட்டியுள்ளனர். தொடர்ந்து அவர்கள் 3 பேரையும் கொலை செய்து விடுவதாகவும் மிரட்டி விட்டு அங்கிருந்து சென்றனர்.

இதுகுறித்து மாணவியின் தாயார் திருவண்ணாமலை கிழக்கு போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். அதன் பேரில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் கருணாகரன் மற்றும் போலீசார், முத்துக்குமார் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்து அவரை கைது செய்தனர்.மேலும், இதில் தொடர்புடைய அவரது நண்பரை தேடி வருகின்றனர்.

Updated On: 19 Aug 2022 11:28 AM GMT

Related News

Latest News

  1. வீடியோ
    🔴LIVE: சீமான் செய்தியாளர் சந்திப்பு | #Seeman #NTK #SrilankanTamils...
  2. லைஃப்ஸ்டைல்
    அம்மாவுக்கு சொல்லுங்க.. அவங்க ரொம்ப சந்தோஷப்படுவாங்க
  3. ஈரோடு
    அந்தியூர் அருகே 2 ஏக்கர் ஆக்கிரமிப்பு நிலம் மீட்பு
  4. லைஃப்ஸ்டைல்
    கோவக்காய் சாப்பிட்டு இருக்கீங்களா? எடை குறைக்குமாம்..!
  5. லைஃப்ஸ்டைல்
    காலைப் பொழுதில் ஒரு புன்னகையுடன்: உங்கள் நாளை அழகாக்கும் ரகசியங்கள்
  6. கல்வி
    கொஞ்சம் கொஞ்சமாக காணாமல் போகும் கர்சிவ் ரைட்டிங் எனும் கையெழுத்துக்...
  7. உலகம்
    ஆறுமாத குழந்தை மீது பலமுறை துப்பாக்கிச்சூடு..! தந்தை கைது..!
  8. திருவள்ளூர்
    பழுதடைந்த குடிநீர் தொட்டியை அகற்ற கிராம மக்கள் கோரிக்கை!
  9. உலகம்
    கடந்த ஆண்டில் வெளுத்துவிட்ட உலகின் 60% க்கும் மேற்பட்ட பவளப்பாறைகள்
  10. அரசியல்
    சீனாவை எதிர்க்க இந்தியாவுக்கு தைரியம் இருக்கா? படீங்க உங்களுக்கே...