/* */

திருவண்ணாமலையில் முதுகலை பட்டதாரி ஆசிரியர்கள் ஆர்ப்பாட்டம்

தமிழ்நாடு முதுகலை பட்டதாரி ஆசிரியர் கழகம் சார்பில் கோரிக்கைகளை வலியுறுத்தி கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

HIGHLIGHTS

திருவண்ணாமலையில் முதுகலை பட்டதாரி ஆசிரியர்கள் ஆர்ப்பாட்டம்
X

திருவண்ணாமலையில், முதுகலை பட்டதாரி ஆசிரியர்கள் கழகம் சார்பில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில்,  ஏராளமான ஆசிரியர்கள் கலந்து கொண்டனர்

திருவண்ணாமலை மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலக வளாகத்தில் தமிழ்நாடு முதுகலை பட்டதாரி ஆசிரியர் கழகம் சார்பில் கோரிக்கைகளை வலியுறுத்தி கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மாவட்ட தலைவர் நாகராஜன் தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர் முருகன், மாவட்ட பொருளாளர் சொக்கலிங்கம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். சிறப்பு அழைப்பாளராக மாநில செயலாளர் ரகு கலந்து கொண்டு கோரிக்கையை வலியுறுத்தி விளக்க உரையாற்றினார்.

இதில் ஆசிரியர்களுக்கு என்று தனியாக பாதுகாப்பு சட்டம் ஏற்படுத்த வேண்டும். பழைய ஓய்வூதிய திட்டத்தை உடனடியாக நடைமுறைப்படுத்த வேண்டும். கடந்த 2 ஆண்டுகளாக வழங்கப்படாத ஈட்டிய விடுப்பு ஊதியத்தை உடனடியாக வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்களை எழுப்பினர். இதில் முதுகலை பட்டதாரி ஆசிரியர்கள் பலர் கலந்து கொண்டனர். முடிவில் மாவட்ட அமைப்பு செயலாளர் முருகவேல் நன்றி கூறினார்.

Updated On: 2 May 2022 6:30 AM GMT

Related News

Latest News

  1. வணிகம்
    சென்னையில் பிரமாண்டமான தாஜ் வீடுகள் விலை தெரியுமா...?
  2. உசிலம்பட்டி
    கனமழை..! சதுரகிரிமலைக்கு செல்ல பக்தர்களுக்கு தடை..!
  3. கல்வி
    அரசின் சான்றிதழ் பெற என்னென்ன ஆவணங்கள் வேணும்..? பள்ளி...
  4. சோழவந்தான்
    அலங்காநல்லூர் அருகே கோடைகால கபாடி பயிற்சி..!
  5. லைஃப்ஸ்டைல்
    அன்பின் அணையா விளக்கு, அம்மா..! அன்னையர் தின வாழ்த்து..!
  6. லைஃப்ஸ்டைல்
    அன்னையின் அன்புக்கு அளவீடு இங்கில்லை..! அம்மாவை வணங்குவோம்..!
  7. லைஃப்ஸ்டைல்
    வயசே தெரியாம பிறந்தநாள் கொண்டாடும் நண்பா..வாழ்த்துகள்..!
  8. ஆன்மீகம்
    விண்ணின் தேவன் மண்ணில் பிறந்த நாள்..! கிறிஸ்துமஸ் வாழ்த்துகள்..!
  9. லைஃப்ஸ்டைல்
    பொங்கலோ..பொங்கல்..! இனிக்கும் பொங்கல் வாழ்த்து..!
  10. வீடியோ
    🔴LIVE: Saattai அலுவலக திறப்பு விழாவில் சீமான் செய்தியாளர்கள்...