/* */

திருவண்ணாமலை அருகே டிராக்டரில் சிக்கி பள்ளி மாணவன் உயிரிழப்பு

திருவண்ணாமலை அருகே டிராக்டரில் சிக்கி பள்ளி மாணவன் பரிதாபமாக உயிரிழப்பு.

HIGHLIGHTS

திருவண்ணாமலை அருகே டிராக்டரில் சிக்கி பள்ளி மாணவன் உயிரிழப்பு
X

திருவண்ணாமலை வேடியப்பனூர் கிராமத்தைச் சேர்ந்தவர் வெங்கடேசன், கூலித்தொழிலாளி. இவரின் மகன் சந்தோஷ் (வயது 16). இவர் 11-ம் வகுப்பு படித்து வந்தார். நேற்று மாலை பள்ளிக்கு சென்று விட்டு வீட்டுக்கு திரும்பிய சந்தோஷ் விளையாடுவதற்காக வெளியே சென்றார்.

அவர் அந்தப் பகுதியைச் சேர்ந்த ஒருவரின் டிராக்டரில் ஏறி விளையாடி உள்ளார். டிராக்டர் ஓடி கொண்டிருந்தபோது டிரைவரின் அருகில் அமர்ந்திருந்த சந்தோஷ் திடீரெனக் கீழே குதித்துள்ளார். இதில் எதிர்பாராத விதமாக டிராக்டர் டிரைலரின் சக்கரத்தில் சிக்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

இது குறித்து தகவலறிந்த திருவண்ணாமலை தாலுகா போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து சந்தோஷின் உடலை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக திருவண்ணாமலை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். விபத்து குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Updated On: 5 April 2022 6:45 AM GMT

Related News

Latest News

  1. இந்தியா
    மே மாதம் எந்தெந்த நாட்கள், எந்தெந்த பகுதிகளில் வங்கி விடுமுறை என்று...
  2. லைஃப்ஸ்டைல்
    நோயின் அறிகுறிகளை முன்பே காட்டும் நகங்கள் பற்றி தெரிஞ்சுக்கலாமா?
  3. லைஃப்ஸ்டைல்
    தொட்டால் சிணுங்கி செடியில் இத்தனை ஆரோக்கிய நன்மைகள் இருக்கிறதா?
  4. தாராபுரம்
    குட்டையாக மாறிய உப்பாறு அணை; விவசாயிகள் வேதனை
  5. லைஃப்ஸ்டைல்
    ஏழு எளிய வழிகளில் உடல் கொழுப்பை கரைக்கலாம் - எப்படீன்னு...
  6. சினிமா
    ‘எப்போதும் கொண்டாடப்பட வேண்டியவர் கங்கை அமரன்’
  7. திருப்பூர் மாநகர்
    பின்னலாடைத் துறையில் வேலை வாய்ப்பு: ஏற்றுமதியாளா்கள் சங்கத்துக்கு...
  8. திருப்பூர் மாநகர்
    பின்னலாடை இயந்திரங்கள், உதிரிபாகங்களை உள்நாட்டிலேயே தயாரிக்க...
  9. உடுமலைப்பேட்டை
    கடும் வறட்சியால் தவிப்பு; உடுமலை வனப் பகுதியில் குடிநீருக்காக அலையும்...
  10. லைஃப்ஸ்டைல்
    உங்க உடம்புல இந்த பிரச்னை இருக்குதா? அப்போ மாதுளம் பழம்