துப்புரவு பணியாளர்கள் கோரிக்கை மனு அளிக்க அழைப்பு
திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள துப்புரவு பணியாளர்கள் கோரிக்கை மனு அளிக்கலாம் என கலெக்டர் தெரிவித்துள்ளார்
HIGHLIGHTS
திருவண்ணாமலை மாவட்டத்தில் பல்வேறு துறைகளில் பணியாற்றும் துப்புரவு பணியாளர்கள் தங்களது கோரிக்கை மனுக்களை வருகிற 29ம் தேதி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெறும் கூட்டத்தில் அளிக்கலாம் என்று மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், புதுடில்லியில் இயங்கும் தேசிய துப்புரவு பணியாளர் நல ஆணையத்தின் தலைவர் வெங்கடேசன் திருவண்ணாமலை மாவட்டத்திற்கு நாளை வருகை தர உள்ளார்.
அப்போது உள்ளாட்சி அமைப்புகள் ,இதர துறைகளில் மனிதக் கழிவுகளை மனிதர்களே அகற்றும் பணி செய்யும் தொழிலாளர்களை கண்டறிந்து அவர்களுக்கு மறுவாழ்வு அளிக்கும் சட்டம் அமல்படுத்துவது குறித்தும் பணியாளர்களுக்கு மத்திய, மாநில அரசு மூலம் செயல்படுத்தப்படும் திட்டங்கள் குறித்து ஆய்வு மேற்கொள்ள உள்ளார்.
தொடர்ந்து துப்புரவு பணியாளர்கள் சங்க பிரதிநிதிகளுடன் ஆய்வுக் கூட்டம் நடைபெற உள்ளது. கூட்டத்தில் பணியாளர்களிடம் குறைகளை கேட்டறிய உள்ளார். எனவே துப்புரவு பணியாளர்கள் தங்களது கோரிக்கை மனுக்களை நாளை நடைபெறும் கூட்டத்தில் பங்கேற்று அளிக்கலாம் என்று மாவட்ட ஆட்சியர் முருகேஷ் தெரிவித்துள்ளார்.