/* */

திருநீறு தயார் செய்து வழங்கும் திட்டம்

அருணாசலேஸ்வரர் கோவிலில் திருநீறு தயார் செய்து வழங்கும் திட்டம் தொடங்கப்பட்டு உள்ளது.

HIGHLIGHTS

திருநீறு தயார் செய்து வழங்கும் திட்டம்
X

அருணாசலேஸ்வரர் கோவிலில் திருநீறு தயார் செய்து வழங்கும் திட்டம்  நகரமன்ற தலைவர் நிர்மலா வேல்மாறன் கலந்து கொண்டு தொடங்கி வைத்தார்.

தமிழகத்தில் உள்ள கோவில்களில் பக்தர்களுக்கு தரமான திருநீறு மற்றும் குங்குமம் வழங்கும் நோக்கில் இந்து சமய அறநிலையத்துறை சார்பில் ரூ.3 கோடி மதிப்பில் 8 கோவில்களில் திருநீறு மற்றும் குங்குமம் தயார் செய்து வழங்கும் திட்டம் தொடங்கப்பட்டு உள்ளது.

திருவண்ணாமலை, திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவில், பழனி முருகன் கோவில், திருவானைக்காவல் ஜம்புலிங்கேஸ்வரர் கோவில் ஆகிய கோவில்களில் திருநீறு தயாரிக்கப்படுகிறது.

அதேபோல் சமயபுரம் மாரியம்மன் கோவில், திருவேற்காடு கருமாரியம்மன் கோவில், பண்ணாரி அம்மன் கோவில், மதுரை மீனாட்சி அம்மன் கோவில் ஆகிய கோவில்களில் குங்குமம் தயாரிக்கப்படுகிறது.

இந்த நிலையில் திருவேற்காட்டில் திருநீறு மற்றும் குங்குமம் தயார் செய்து வழங்கும் திட்டத்தை இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு காணொலி காட்சி மூலம் தொடங்கி வைத்தார்.

அப்போது திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு கோவில் இணை ஆணையர் அசோக்குமார் தலைமை தாங்கினார். இந்து சமய அறநிலையத்துறை திருவண்ணாமலை மண்டல இணை ஆணையர் கஜேந்திரன் முன்னிலை வகித்தார்.

சிறப்பு அழைப்பாளராக திருவண்ணாமலை நகரமன்ற தலைவர் நிர்மலா வேல்மாறன் கலந்து கொண்டு அருணாசலேஸ்வரர் கோவில் சார்பில் தயாரிக்கப்பட்ட திருநீறை திருவண்ணாமலை கற்பகவிநாயகர் கோவில், காமாட்சி அம்மன் கோவில், திருவத்திபுரம் வேதபுரீஸ்வரர் கோவில், செங்கம் ரிஷபேஸ்வரர் கோவில், படவேடு ரேணுகாம்பாள் கோவில் ஆகிய கோவில்களுக்கு வழங்கி தொடங்கி வைத்தார்.

நிகழ்ச்சியில் உதவி ஆணையாளர்கள் ஜோதிலட்சுமி, சந்திரசேகரன், அறநிலையத்துறைக்கு உட்பட்ட கோவில் செயல் அலுவலர்கள், அருணாசலேஸ்வரர் கோவில் பணியாளர்கள் கலந்து கொண்டனர்.

Updated On: 11 April 2022 1:02 AM GMT

Related News

Latest News

  1. இந்தியா
    மே மாதம் எந்தெந்த நாட்கள், எந்தெந்த பகுதிகளில் வங்கி விடுமுறை என்று...
  2. லைஃப்ஸ்டைல்
    நோயின் அறிகுறிகளை முன்பே காட்டும் நகங்கள் பற்றி தெரிஞ்சுக்கலாமா?
  3. லைஃப்ஸ்டைல்
    தொட்டால் சிணுங்கி செடியில் இத்தனை ஆரோக்கிய நன்மைகள் இருக்கிறதா?
  4. தாராபுரம்
    குட்டையாக மாறிய உப்பாறு அணை; விவசாயிகள் வேதனை
  5. லைஃப்ஸ்டைல்
    ஏழு எளிய வழிகளில் உடல் கொழுப்பை கரைக்கலாம் - எப்படீன்னு...
  6. சினிமா
    ‘எப்போதும் கொண்டாடப்பட வேண்டியவர் கங்கை அமரன்’
  7. திருப்பூர் மாநகர்
    பின்னலாடைத் துறையில் வேலை வாய்ப்பு: ஏற்றுமதியாளா்கள் சங்கத்துக்கு...
  8. திருப்பூர் மாநகர்
    பின்னலாடை இயந்திரங்கள், உதிரிபாகங்களை உள்நாட்டிலேயே தயாரிக்க...
  9. உடுமலைப்பேட்டை
    கடும் வறட்சியால் தவிப்பு; உடுமலை வனப் பகுதியில் குடிநீருக்காக அலையும்...
  10. லைஃப்ஸ்டைல்
    உங்க உடம்புல இந்த பிரச்னை இருக்குதா? அப்போ மாதுளம் பழம்