/* */

சாத்தனூர் அணையில் இருந்து நீர் வெளியேற்றம்; பொதுமக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை

Sathanur Dam Today News-சாத்தனூர் அணையில் இருந்து நீர் வெளியேற்றப்படுவதால், பொதுப்பணித்துறை, வருவாய் துறையினர் பொதுமக்களுக்கு, எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

HIGHLIGHTS

சாத்தனூர் அணையில் இருந்து நீர் வெளியேற்றம்; பொதுமக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை
X

சாத்தனூர் அணை

Sathanur Dam Today News- தமிழகத்தில் கடந்த சில நாட்களாக தொடர்மழை பெய்து வருகிறது. இதனால் தமிழகம் முழுவதும் நீர்நிலைகள் நிரம்பியுள்ளன.

திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள சாத்தனூர் அணை முழு கொள்ளளவை எட்டியதால், கிருஷ்ணகிரி அணையில் இருந்து வரும் தண்ணீர் அப்படியே வெளியேற்றப்படுகிறது. இதனால், கரையோர மக்கள் ஆற்றில் இறங்க வேண்டாம் என மாவட்ட நிர்வாகம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

கடந்த 10 நாட்களாக, கிருஷ்ணகிரி மற்றும் திருவண்ணாமலை மாவட்டத்தில் பரவலாக மழை பெய்து வருகிறது. திருவண்ணாமலை மாவட்டத்தில், அதிகபட்சமாக செங்கத்தில் 15.80 மில்லி மீட்டர் மழை பதிவானது. ஜமுனா மரதூரில் 10 தண்டராம்பட்டில் 9.20 , கலசப்பாக்கத்தில் 5 மில்லி மீட்டர் மழை பதிவானது.

திருவண்ணாமலை மாவட்டம், தண்டராம்பட்டு அருகில் சாத்தனூர் அணை உள்ளது. 119 அடி உயரம் கொண்ட இந்த அணையில் 7,321 மில்லியன் கன அடி நீரை தேக்கி வைக்க முடியும். தற்போது அணையில் 116.60 அடி உயரத்திற்கு அதாவது, 6,788 மில்லியன் கன அடி அளவிற்கு நீர் தேக்கி வைக்கப்பட்டுள்ளது. இது மொத்த கொள்ளளவில் 92.72 சதவீதமாகும்.

சாத்தனூர் அணை, கடந்த இரண்டு மாதத்திற்கு முன்பே முழு கொள்ளளவை எட்டிய நிலையில், அணையின் பாதுகாப்பு கருதி உபரிநீர் வெளியேற்றப்பட்டு வந்தது. மேலும் அணையில் இருந்து பாசனத்திற்காக திறந்து விடப்படும் இடது மற்றும் வலதுபுற கால்வாயிலும் நீர் திறந்து விடப்பட்டு வந்தது. இந்நிலையில், தற்போது வடகிழக்கு பருவ மழை பெய்யத் தொடங்கி கல்வராயன் மலைத்தொடர் பகுதியிலும், கிருஷ்ணகிரி அணையின் உபரிநீரும் சேர்ந்து சாத்தனூர் அணைக்கு வரும் தென்பெண்ணையாற்றில் நீர்வரத்து, நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே வருகிறது.

நேற்று மாலை நிலவரப்படி, வினாடிக்கு 3,760 கன அடி நீர் அணைக்கு வந்து கொண்டிருந்தது. இது ஒரே நாளில் நான்கு மடங்காக உயர்ந்து தற்போது வினாடிக்கு 12,345 கன அடி நீராக வந்து கொண்டிருக்கிறது. எனவே, அணையின் பாதுகாப்பு கருதி அணையில் இருந்து வினாடிக்கு 9,930 கன அடி நீர் தென்பெண்ணை ஆற்றில் வெளியேற்றப்படுகிறது. இதில் 450 கன அடி நீர் பாசன கால்வாய் வழியாக வெளியேற்றப்படுகிறது.

இதன் காரணமாக, தென்பெண்ணை ஆற்றில் வெள்ளம் ஆர்ப்பரித்து செல்கிறது. எனவே, சாத்தனூர் அணையில் இருந்து திருக்கோவிலூர் வழியாக கடலூரை சென்றடையும் தென்பெண்ணை ஆற்றின் கரையோர பகுதியில் வாழும் திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, விழுப்புரம், கடலூர் ஆகிய 4 மாவட்டங்களை சேர்ந்த பொதுமக்கள் பாதுகாப்பான இடத்திற்கு செல்லுமாறும், யாரும் ஆற்றில் இறங்கவோ, போனில் 'செல்பி' எடுத்துக் கொள்வதை தவிர்க்க வேண்டும் என்றும் பொதுப்பணித்துறையினர் மற்றும் வருவாய் துறையினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

மேலும் சாத்தனூர் அணையில் இருந்து உபரிநீர் அதிக அளவில் வெளியேறும் போது, அணையிலும் அணையை ஒட்டி உள்ள கரையோர பகுதிகளில் இருக்கும் முதலைகள் அடித்து வரப்பட்டு ஆற்று நீரில் இருப்பதற்கு வாய்ப்புகள் உள்ளது. எனவே பொதுமக்கள் ஜாக்கிரதையாக இருக்கும்படி அதிகாரிகள் கேட்டுக் கொண்டுள்ளனர்.


அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2


Updated On: 16 Feb 2024 9:39 AM GMT

Related News

Latest News

  1. திருப்பூர்
    திருப்பூருக்கு முதலிடம் கிடைக்குமா? - பிளஸ் 2 தேர்வு முடிவு நாளை...
  2. உடுமலைப்பேட்டை
    மழை வேண்டி வன தேவதைகளுக்கு விழா எடுத்த மலைவாழ் மக்கள்
  3. லைஃப்ஸ்டைல்
    அலட்சியம்: தோல்விக்கான பாதையை நோக்கிய ஒரு பயணம்
  4. நாமக்கல்
    நாமக்கல்லில் 11 மையங்களில் நீட் தேர்வு 6,180 பேர் பங்கேற்பு: 120 பேர்...
  5. கவுண்டம்பாளையம்
    தடாகம் பகுதியில் 12 கிலோ கஞ்சா பறிமுதல் ; இருவர் கைது
  6. லைஃப்ஸ்டைல்
    மின்விசிறியா அல்லது காற்றூதியா? மின்சாரம் சேமிப்பது எது?
  7. காங்கேயம்
    சிறுமிக்கு பாலியல் தொல்லை; குண்டா் சட்டத்தில் 8 போ் கைது
  8. நாமக்கல்
    நாமக்கல்லில் முட்டை விலை உயர்வு!
  9. மேட்டுப்பாளையம்
    அன்னூரில் மழை வேண்டி கழுதைகளுக்கு திருமணம் செய்து வைத்த கிராம மக்கள்
  10. திருப்பூர்
    திருப்பூர்; மாணவா்களுக்கு கோடைகால கலைப் பயிற்சி முகாம்