/* */

கார்த்திகை தீப திருவிழாவிற்கு 20,000 பக்தர்களுக்கு மட்டுமே அனுமதி

தீப திருவிழாவிற்கு 20,000 பக்தர்களுக்கு மட்டும் அனுமதி அளிப்பதாக இந்து சமய அறநிலையத் துறை, சென்னை உயர்நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது

HIGHLIGHTS

கார்த்திகை தீப திருவிழாவிற்கு 20,000 பக்தர்களுக்கு மட்டுமே அனுமதி
X

திருவண்ணாமலை கிரிவலப் பாதையில் மொத்தமாக 20 ஆயிரம் பக்தர்களுக்கு சென்னை உயர்நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.

இந்த ஆண்டு கொரோனா பரவல் காரணமாக பக்தர்களின்றி திருவிழா நடத்த தமிழக அரசு அறிவிப்பு வெளியிட்டது. இதற்கு தமிழகம் முழுவதும் கடும் எதிர்ப்பு கிளம்பியது மட்டுமில்லாமல், இதுகுறித்து சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.

இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தபோது, இந்து சமய அறநிலையத் துறை ஆணையர் தரப்பில், கிரிவலம் செல்ல 20 ஆயிரம் பக்தர்களுக்கு அனுமதி அளிக்கப்படுவதாகவும், 15 ஆயிரம் பேர் வெளியூர் பக்தர்கள், 5 ஆயிரம் உள்ளூர் பக்தர்கள் கலந்துகொள்ளலாம் எனவும் தெரிவிக்கப்பட்டது..

ஆனால், மலை மீது ஏறவோ, கோவிலுக்குள் செல்லவோ பக்தர்களுக்கு அனுமதியில்லை, கோவிலுக்குள் கட்டளைதாரர்கள் 300 பேர் மட்டும் செல்லலாம் எனவும் தெரிவிக்கப்பட்டது.

இந்து சமய அறநிலையத்துறையின் விளக்கத்தை ஏற்று வழக்கை சென்னை உயர்நீதிமன்றம் முடித்து வைத்தது

Updated On: 18 Nov 2021 11:12 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    ‘தனியே ... தன்னந்தனியே ...’ - வாழ்க்கையை தைரியமாக எதிர்கொள்ளுங்கள்!
  2. லைஃப்ஸ்டைல்
    நான் பாடும் மௌன ராகம் கேட்கவில்லையா? - ஒரு பக்க காதல் மேற்கோள்கள்...
  3. லைஃப்ஸ்டைல்
    ‘பூக்கள் பூக்கும் தருணம் ஆருயிரே... பார்த்ததாரும் இல்லையே!’ - தமிழில்...
  4. லைஃப்ஸ்டைல்
    எண்ணெய் குளியலில் இவ்வளவு விஷயங்கள் இருக்குதா?
  5. லைஃப்ஸ்டைல்
    என்னை ஈன்றவளுக்கு இன்று பிறந்தநாள்..!
  6. தொழில்நுட்பம்
    POCO X6 Neo: விலையால் அசத்தும் ஃபோன்!
  7. லைஃப்ஸ்டைல்
    ஒற்றை வரியில் வெற்றி மொழிகள்..!
  8. லைஃப்ஸ்டைல்
    அலைகளற்ற ஆழ்கடல், அப்பா..!
  9. பொன்னேரி
    மீஞ்சூர், சோழவாரத்தில் நீர் மோர் பந்தல் திறப்பு
  10. லைஃப்ஸ்டைல்
    காதல் என்றால் ரொமான்ஸ் இல்லாமலா..?