/* */

திருவண்ணாமலை மாவட்டத்தில் அக். 17-ந் தேதி முதல் வாக்காளர் பெயர் சேர்ப்பு

திருவண்ணாமலை மாவட்டத்தில் அக்டோபர் 17-ந் தேதி முதல் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்கலாம் என அமைச்சர் தெரிவித்துள்ளார்.

HIGHLIGHTS

திருவண்ணாமலை மாவட்டத்தில் அக். 17-ந் தேதி முதல் வாக்காளர் பெயர் சேர்ப்பு
X

அமைச்சர் எ.வ.வேலு.

திருவண்ணாமலை மாவட்டத்தில் அக்டோபர் 17-ந் தேதி முதல் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்கலாம் என்று தி.மு.க. உயர்நிலை செயல்திட்டக்குழு உறுப்பினரும், பொதுப்பணித்துறை அமைச்சருமான எ.வ.வேலு தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், 1-1-2024-ஐ தகுதியேற்படுத்தும் நாளாக கொண்டு புகைப்படத்துடன் கூடிய வாக்காளர் பட்டியல் சிறப்பு சுருக்க முறை திருத்தத்திற்கான இந்திய தேர்தல் ஆணையம் அட்டவணையினை அறிவித்து உள்ளது.

அதன்படி வாக்குச்சாவடி நிலைய அலுவலர் வருகிற 21-7-2023 முதல் 21-8-2023 வரை வீடு வீடாக வந்து வாக்காளர் பட்டியலை சரிப்பார்ப்பார்கள். வாக்குச்சாவடிகளை திருத்தியமைத்தல் மற்றும் மறுசீரமைத்தல், வாக்காளர் பட்டியல் மற்றும் வாக்காளர் புகைப்பட அடையாள அட்டையில் உள்ள முரண்பாடுகளை நீக்குதல், வாக்காளர் பட்டியலில் உள்ள மங்கலான, மோசமான தரமற்ற படங்களை மாற்றி நல்ல தரமான புகைப்படங்களை வருகிற 22-8-2023 முதல் 29-9-2023 வரை செய்யப்படும். இதைத் தொடர்ந்து ஒருங்கிணைந்த வரைவு வாக்காளர் பட்டியல் 17-10-2023 அன்று வெளியிடப்படும்.

17-10-2023 முதல் 30-11-2023 வரை வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்ப்பது, நீக்கம், திருத்தம் செய்ய விண்ணப்பங்கள் பெறப்படும். இந்த விண்ணப்பங்களை அலுவலக வேலை நாட்டிகளில் வாக்குச்சாவடி நிலைய அலுவலர் அல்லது வாக்காளர் பதிவு அதிகாரி, உதவி வாக்காளர் பதிவு அதிகாரி அலுவலகங்களில் அளிக்கலாம். சிறப்பு முகாம் குறித்த தகவல் பின்னர் தெரிவிக்கப்படும்.

புதிதாக பெயர் சேர்க்க, நீக்கம் செய்ய விண்ணப்பம் அளித்தவர்களை புதிய வாக்காளர் பட்டியலில் சேர்க்கும் பணி 26-12-2023-க்கும் முடிவடையும். இதைத் தொடர்ந்து 5-1-2024 அன்று இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடப்படும். வாக்காளர் பட்டியலில் புதிதாக பெயர் சேர்க்க 18 முதல் 25-க்கும் கீழ் உள்ள மனுதாரர்கள் வயது சான்றிதழை அளிக்க வேண்டியது கட்டாயம். www.voters.eci.gov.in, https://voterportal.eci.gov.in ஆகிய இணையதள முகவரி மற்றும் வாக்காளர் உதவி கைபேசி செயலி ஆகியவற்றின் மூலம் ஆன்லைன் முறையில் விண்ணப்பிக்க வசதி செய்யப்பட்டு உள்ளது.

1-1-2024, 1-4-2024, 1-7-2024 மற்றும் 1-10-2024 ஆகிய தேதிகளில் 18 வயது பூர்த்தியடைபவர்களுக்கும், வாக்காளர் பட்டியலில் பெயர் இல்லாதவர்களும், பெயர் சேர்க்க படிவம் 6-ல் விண்ணப்பிக்கலாம்.

எனவே மாவட்ட, ஒன்றிய, நகர, பேரூர் கிளை நிர்வாகிகள் மற்றும் வாக்குச்சாவடி முகவர்கள் விரைந்து இப்பணியினை முடித்திட கேட்டுக்கொள்கிறேன். இவ்வாறு அமைச்சர் எ.வ.வேலு வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவித்துள்ளார்.

Updated On: 1 July 2023 1:19 AM GMT

Related News

Latest News

  1. வணிகம்
    சென்னையில் பிரமாண்டமான தாஜ் வீடுகள் விலை தெரியுமா...?
  2. உசிலம்பட்டி
    கனமழை..! சதுரகிரிமலைக்கு செல்ல பக்தர்களுக்கு தடை..!
  3. கல்வி
    அரசின் சான்றிதழ் பெற என்னென்ன ஆவணங்கள் வேணும்..? பள்ளி...
  4. சோழவந்தான்
    அலங்காநல்லூர் அருகே கோடைகால கபாடி பயிற்சி..!
  5. லைஃப்ஸ்டைல்
    அன்பின் அணையா விளக்கு, அம்மா..! அன்னையர் தின வாழ்த்து..!
  6. லைஃப்ஸ்டைல்
    அன்னையின் அன்புக்கு அளவீடு இங்கில்லை..! அம்மாவை வணங்குவோம்..!
  7. லைஃப்ஸ்டைல்
    வயசே தெரியாம பிறந்தநாள் கொண்டாடும் நண்பா..வாழ்த்துகள்..!
  8. ஆன்மீகம்
    விண்ணின் தேவன் மண்ணில் பிறந்த நாள்..! கிறிஸ்துமஸ் வாழ்த்துகள்..!
  9. லைஃப்ஸ்டைல்
    பொங்கலோ..பொங்கல்..! இனிக்கும் பொங்கல் வாழ்த்து..!
  10. வீடியோ
    🔴LIVE: Saattai அலுவலக திறப்பு விழாவில் சீமான் செய்தியாளர்கள்...