Begin typing your search above and press return to search.
இரவு நேர ஊரடங்கால் வெறிச்சோடி காணப்பட்ட திருவண்ணாமலை நகரம்
இரவு நேர ஊரடங்கு காரணமாக, திருவண்ணாமலை நகரம் இரவில் வெறிச்சோடி காணப்பட்டது.
HIGHLIGHTS
தமிழகத்தில் அதிகரித்து வரும் கொரோனா தொற்று காரணமாக நேற்று முதல், இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. அதன்படி, திருவண்ணாமலையில் இரவு 10 மணிக்கு அனைத்து கடைகளும் அடைக்கப்பட்டன.
பஸ் போக்குவரத்திற்கு தடை இல்லாததால் திருவண்ணாமலையில் இருந்து வெளியூர் செல்லும் பஸ்கள் இயக்கப்பட்டன. இருப்பினும் குறைந்த அளவிலான மக்களே பஸ் நிலையத்தில் இருந்தனர். இரவு பத்து மணிக்கு பிறகு, நகரின் முக்கிய வீதிகள் வெறிச்சோடி காணப்பட்டன. இன்று காலையில் வழக்கம் போல் மக்கள் நடமாட்டம் இருந்தது.