Begin typing your search above and press return to search.
நீர்வரத்து கால்வாய் புனரமைக்கும் பணி: அமைச்சர் ஆய்வு
திருவண்ணாமலையில் நீர்வரத்து கால்வாய் மற்றும் நீர் செல்லும் பாதை புனரமைக்கும் பணியை பொதுப்பணித்துறை அமைச்சர் வேலு ஆய்வு மேற்கொண்டார்
HIGHLIGHTS
திருவண்ணாமலையில் வேங்கிக்கால் ஏரி, முதல் நொச்சிமலை ஏரி வரை, ஏரி வரத்து கால்வாய் மற்றும் நீர் செல்லும் பாதை புனரமைக்கும் பணி ஆகியவற்றினை திருவண்ணாமலையில் பொதுப்பணித்துறை அமைச்சர் எ வ.வேலு அவர்கள் ஆய்வு செய்து அதிகாரிகளுக்கு ஆலோசனை வழங்கினார் .
இந்த ஆய்வின்போது மாவட்ட ஆட்சியர் முருகேஷ், செங்கம் சட்டமன்ற உறுப்பினர் கிரி, அருணை மருத்துவக்கல்லூரி துணைத்தலைவர் மருத்துவர் எ. வ. வே. கம்பன் , முன்னாள் நகரமன்ற தலைவர் ஸ்ரீதரன், நகர கழக செயலாளர் கார்த்திக் வேல்மாறன் மற்றும் பொதுப்பணித்துறை மற்றும் நகராட்சி துறை அதிகாரிகள், வருவாய் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.