Begin typing your search above and press return to search.
பொதுமக்கள் அச்சமின்றி வாக்களிக்க போலீசார் கொடி அணிவகுப்பு
திருவண்ணாமலையில் பொதுமக்கள் எந்தவித பதற்றமும் இன்றி வாக்களிக்க எஸ்பி பவன்குமார் தலைமையில் போலீசார் கொடி அணிவகுப்பு ஊர்வலம் நடத்தினர்
HIGHLIGHTS
திருவண்ணாமலையில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் வாக்காளர்கள் எந்தவித பதற்றமும் இன்றி வாக்களிக்க விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் எஸ்பி பவன்குமார் தலைமையில் துப்பாக்கி மற்றும் பாதுகாப்பு கவசங்கள் அணிந்த போலீசாரின் கொடி அணிவகுப்பு ஊர்வலம் நடைபெற்றது.
திருவண்ணாமலையில் பெரியார் சிலை அருகே போலீசார் கொடி அணிவகுப்பை எஸ்பி தலைமை தாங்கி கொடியசைத்து தொடக்கி வைத்தார்.
இதில் துணை காவல் கண்காணிப்பாளர் கிரண் ஸ்ருதி, டிஎஸ்பிக்கள், காவல்துறை உதவி ஆய்வாளர்கள், உள்பட 100க்கும் மேற்பட்ட போலீஸார் கலந்து கொண்டனர்.