/* */

திருவண்ணாமலை மாவட்டத்தில் நாளை விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம்

திருவண்ணாமலை மாவட்டத்தில் மாவட்ட விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம் நாளை நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

HIGHLIGHTS

திருவண்ணாமலை மாவட்டத்தில் நாளை விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம்
X

திருவண்ணாமலை கலெக்டர் முருகேஷ்.

திருவண்ணாமலை மாவட்டத்தில் மாவட்ட விவசாயிகள் குறைதீர்வு கூட்டம் நாளை நடைபெற உள்ளது

இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் முருகேஷ் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் ஏப்ரல் மாதத்திற்கான விவசாயிகள் குறைதீர்வு நாள் கூட்டம் நாளை காலை பத்து முப்பது மணி அளவில் மாவட்ட ஆட்சியர் தலைமையில் நேரடியாக நடைபெற உள்ளது.

வேளாண்மைத் துறை மற்றும் விவசாயம் சார்ந்த துறைகளுக்கான தோட்டக்கலை துறை, வேளாண் வணிகம், வேளாண் பொறியியல் துறை, கால்நடை பராமரிப்பு துறை, கூட்டுறவுத் துறை, வருவாய் துறை ,வங்கியாளர்கள் மற்றும் பிற சார்பு துறை அலுவலர்கள் கலந்து கொண்டு விவசாயிகளின் குறைகள் மற்றும் கோரிக்கைகளுக்கு பதில் அளிக்க உள்ளனர்.

எனவே விவசாயிகள் மற்றும் விவசாய சங்க பிரதிநிதிகள் தங்களது கோரிக்கைகளை கூட்டத்தில் தெரிவித்தும் தனிநபர் குறைகள் குறித்து மனுக்கள் அளித்தும் பயனடையுமாறு மாவட்ட ஆட்சியர் முருகேஷ் கேட்டுக்கொண்டுள்ளார்.

Updated On: 21 April 2022 7:18 AM GMT

Related News

Latest News

  1. பல்லடம்
    பல்லடத்தில் வெட்டப்பட்ட மரங்கள்; இயற்கை ஆர்வலர்கள் வேதனை
  2. லைஃப்ஸ்டைல்
    அப்பாவுக்கான பிறந்தநாள் வாழ்த்துகள் :
  3. லைஃப்ஸ்டைல்
    சர்வாதிகாரி என்ற வார்த்தையை உச்சரித்தாலே நினைவில் வரும் ஹிட்லர்
  4. லைஃப்ஸ்டைல்
    உழைக்கும் தோழர்களுக்கு ஒரு சல்யூட்..!
  5. குமாரபாளையம்
    சர்வ சக்தி மாரியம்மன் திருவிழா
  6. லைஃப்ஸ்டைல்
    ஒருபோதும் தன்னை நிரூபிக்க வேண்டியதில்லை. அதன் இருப்பு போதும்! அது தான்...
  7. தமிழ்நாடு
    புதுச்சேரி தேசிய தொழில்நுட்பக்கழகத்தின் புதிய இயக்குநர் பொறுப்பேற்பு
  8. கல்வி
    சென்னை சிப்பெட் வழங்கும் 3 ஆண்டு டிப்ளமோ படிப்புகள்: மாணவர் சேர்க்கை...
  9. லைஃப்ஸ்டைல்
    கஷ்டம் வரும்போது சிரிங்க..! துன்பம் தூசியாகும்..!
  10. வீடியோ
    Adani துறைமுகத்துல போதைப்பொருள் இருந்துச்சு என்ன நடவடிக்கை எடுத்தாங்க...