Begin typing your search above and press return to search.
வாக்கு எண்ணும் மையத்தில் தேர்தல் அலுவலர் ஆய்வு
நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலையொட்டி வந்தவாசியில் வாக்கு எண்ணும் மையத்தில் தேர்தல் அலுவலர் முஸ்தபா ஆய்வு மேற்கொண்டார்.
HIGHLIGHTS
வந்தவாசி நகராட்சிக்குட்பட்ட 24 வார்டுகளில் 117 பேர் போட்டியிடுகின்றனர். இதையொட்டி ஸ்ரீ அகிலாண்டேஸ்வரி மகளிர் கல்லூரியில் அமைக்கப்பட்டுள்ள வாக்கு எண்ணும் மையத்தினை வந்தவாசி நகராட்சி தேர்தல் நடத்தும் அலுவலர் முஸ்தாபா நேரில் ஆய்வு மேற்கொண்டார்.
அப்போது வாக்குப்பதிவு இயந்திரங்களை பாதுகாப்பாக வைக்கும் அறை, வாக்கு எண்ணிக்கை நடைபெற உள்ள அறையில் சிசிடிவி கண்காணிப்பு கேமராக்கள் வைக்கப்பட வேண்டிய பகுதிகள் உள்ளிட்டவை குறித்து ஆய்வு செய்தார். இந்த ஆய்வின்போது டிஎஸ்பி விஸ்வேஸ்வரய்யா, நகராட்சி பொறியாளர் உஷாராணி, பொதுப்பணித் துறை ஆய்வாளர்கள், வருவாய் துறையினர், காவல் துறையினர், தேர்தல் உதவியாளர்கள் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.