Begin typing your search above and press return to search.
அருணாசலேஸ்வரர் கோவிலில் பக்தர்கள் கூட்டம் அலைமோதியது
நேற்று விடுமுறை மற்றும் பௌர்ணமிக்கு வர இயலாத பக்தர்கள் குவிந்ததால், அருணாசலேஸ்வரர் கோவிலில் பக்தர்கள் கூட்டம் அலைமோதியது
HIGHLIGHTS
நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலை முன்னிட்டு நேற்று விடுமுறை தினம் என்பதால், இன்று அருணாசலேஸ்வரர் கோவிலில் பக்தர்கள் கூட்டம் அலைமோதியது.
மேலும் கடந்த 15-ந் தேதி இரவு முதல் 16-ந் தேதி இரவு வரை பவுர்ணமி இருந்தது. பவுர்ணமிக்கு திருவண்ணாமலைக்கு வர முடியாத பக்தர்கள் இன்று அருணாசலேஸ்வரர் கோவிலுக்கு வந்தனர். இதனால் கூட்டம் அதிகரித்ததால் பக்தர்கள் கோவிலில் நீண்ட வரிசையில் நின்று சாமி தரிசனம் செய்தனர்.
சுமார் 2 மணி நேரத்திற்கு மேல் வரிசையில் நின்று சாமி தரிசனம் செய்ததாக வெளியே வந்த பக்தர்கள் கூறினர். மேலும் பக்தர்கள் பலர் தனித்தனியாக கிரிவலமும் சென்றனர். மாட வீதிகளில் மிகுந்த போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.