/* */

பங்குனி மாத பௌர்ணமி: கிரிவலப்பாதையில் குவிந்த பக்தர்கள்

திருவண்ணாமலையில் பவுர்ணமி கிரிவலம் செல்ல ஆயிரக்கணக்கான பக்தர்கள் ஆர்வமுடன் வருகை புரிந்துள்ளனர்.

HIGHLIGHTS

பங்குனி மாத பௌர்ணமி:  கிரிவலப்பாதையில் குவிந்த பக்தர்கள்
X

கிரிவலப்பாதையில் பக்தர்களின் கூட்டம்.

திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவில் சிவனின் அக்னி தலமாக போற்றப்படுகிறது. இக்கோவிலுக்கு தமிழகம் மட்டுமின்றி பல்வேறு மாநிலங்களில் இருந்தும் பக்தர்கள் வருகை தருகின்றனர். மேலும் வெளிநாட்டு பக்தர்கள் பலர் தங்கி தியானம் உள்ளிட்ட ஆன்மீக வழிபாட்டு முறைகளை கடைப்பிடித்து மன அமைதி பெறுகின்றனர்.

இந்த நிலையில் தமிழகத்தில் கொரோனா பரவல் காரணமாக கடந்த 2 ஆண்டுகளாக பக்தர்கள் பவுர்ணமி கிரிவலம் செல்ல அனுமதிக்கப்படவில்லை. தற்போது கொரோனாவின் தாக்கம் குறைந்துள்ள நிலையில் திருவண்ணாமலையில் பக்தர்கள் மீண்டும் கிரிவலம் செல்லலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இதனை தொடர்ந்து நேற்று ஆயிரக்கணக்கான பக்தர்கள் திருவண்ணாமலைக்கு வந்து கிரிவலம் சென்றனர். பக்தர்கள் வருகையை முன்னிட்டு கிரிவலப்பாதையில் துப்புரவு பணிகள் மற்றும் கழிவறைகள் சுத்தம் செய்யும் பணிகள் முழு வேகத்தில் நடைபெற்றன.

இந்நிலையில் இன்று மதியம் பங்குனி மாத பவுர்ணமி தொடங்கவுள்ள நிலையில் காலையிலேயே பக்தர்கள் வருகை தரத் தொடங்கி விட்டனர். அவர்கள் கோவில் முன்பு நின்று தரிசனம் செய்து விட்டு கிரிவலம் சென்று வருகின்றனர். கிரிவலம் சென்று வந்த பக்தர்கள் சாமி தரிசனம் செய்கின்றனர்.

இன்று காலையில் இருந்தே வெயிலின் தாக்கம் மிக அதிகமாக இருந்த நிலையிலும் பக்தர்களின் கூட்டம் கிரிவலம் செல்வதற்கு மிக அதிகமாக இருந்தது. மதியம் உச்சி வெயிலிலும் பக்தர்கள் காலணிகள் அணியாமல் அந்த சுட்டெரிக்கும் வெயிலில் கிரிவலம் வந்தனர்.

கிரிவலப் பாதை பல இடங்களில் இலவச மோர், தர்பூசணி, வெள்ளரிக்காய் போன்ற குளிர்ச்சியான பொருட்களை இலவசமாக பக்தர்களுக்கு பல அமைப்புகள் மூலம் வழங்கப்பட்டது. பக்தர்கள் வருகையை முன்னிட்டு ஆன்மீக அமைப்புகள் சார்பில் கோவில் மற்றும் கிரிவலப் பாதையில் அன்ன தானங்கள் நடைபெற்று வருகிறது.

இதையொட்டி சாலையோரங்களில் சிறு சிறு கடைகள் பல தற்காலிகமாக அமைக்கப்பட்டு செயல்பட்டு வருகிறது. கற்பூரம் மற்றும் பூஜை பொருட்கள் விற்பனை களைகட்டியுள்ளது. பக்தர்கள் எந்தவித தடையும் இன்றி மனமகிழ்ச்சியுடன் கிரிவலம் சென்று வருகின்றனர். இன்று இரவு பக்தர்களின் கூட்டம் அதிக அளவில் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Updated On: 17 March 2022 1:58 PM GMT

Related News

Latest News

  1. இந்தியா
    மே மாதம் எந்தெந்த நாட்கள், எந்தெந்த பகுதிகளில் வங்கி விடுமுறை என்று...
  2. லைஃப்ஸ்டைல்
    நோயின் அறிகுறிகளை முன்பே காட்டும் நகங்கள் பற்றி தெரிஞ்சுக்கலாமா?
  3. லைஃப்ஸ்டைல்
    தொட்டால் சிணுங்கி செடியில் இத்தனை ஆரோக்கிய நன்மைகள் இருக்கிறதா?
  4. தாராபுரம்
    குட்டையாக மாறிய உப்பாறு அணை; விவசாயிகள் வேதனை
  5. லைஃப்ஸ்டைல்
    ஏழு எளிய வழிகளில் உடல் கொழுப்பை கரைக்கலாம் - எப்படீன்னு...
  6. சினிமா
    ‘எப்போதும் கொண்டாடப்பட வேண்டியவர் கங்கை அமரன்’
  7. திருப்பூர் மாநகர்
    பின்னலாடைத் துறையில் வேலை வாய்ப்பு: ஏற்றுமதியாளா்கள் சங்கத்துக்கு...
  8. திருப்பூர் மாநகர்
    பின்னலாடை இயந்திரங்கள், உதிரிபாகங்களை உள்நாட்டிலேயே தயாரிக்க...
  9. உடுமலைப்பேட்டை
    கடும் வறட்சியால் தவிப்பு; உடுமலை வனப் பகுதியில் குடிநீருக்காக அலையும்...
  10. லைஃப்ஸ்டைல்
    உங்க உடம்புல இந்த பிரச்னை இருக்குதா? அப்போ மாதுளம் பழம்