Begin typing your search above and press return to search.
செய்யாறில் 500 படுக்கையுடன் கொரோனா வார்டு: அரசு நிர்வாகம் சுறுசுறுப்பு
செய்யாறு அரசு பாலிடெக்னிக் கல்லூரியில், 500 படுக்கையுடன் கொரோனா சிறப்பு சிகிச்சை வார்டு தயார் செய்யப்பட்டுள்ளது.
HIGHLIGHTS
திருவண்ணாமலை மாவட்டத்தில் தொற்று பரவல் அதிகரித்து வருகிறது. அதை எதிர்கொள்ள மாவட்ட நிர்வாகமும் சுறுசுறுப்புடன் களமிறங்கி இருக்கிறது. அவ்வகையில், செய்யாறு அரசு பாலிடெக்னிக் கல்லூரியில், 500 படுக்கை வசதியுடன் கொரோனா சிறப்பு சிகிச்சை வார்டு அமைக்கும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இப்பணியை, மாவட்ட கலெக்டர் முருகேஷ் ஆய்வு செய்து ஆலோசனை வழங்கினார்.
தொடர்ந்து செய்யாறு மற்றும் வெம்பாக்கம் ஒன்றியத்தில் நடைபெறும் வளர்ச்சித் திட்டப் பணிகளை பார்வையிட்டு ஆய்வு செய்தார். ஆய்வின்போது செய்யாறு உதவி கலெக்டர் என்.விஜயராஜ், செய்யாறு சுகாதார மாவட்ட துணை இயக்குனர் பிரியாராஜ், நாவல்பாக்கம் வட்டார மருத்துவ அலுவலர் ஷர்மிளா, வட்டார வளர்ச்சி அலுவலர்கள் மயில்வாகனம், கோபாலகிருஷ்ணன் உள்ளிட்ட பலரும் உடன் இருந்தனர்.