/* */

திருவண்ணாமலை மாவட்டத்தில் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்கும் உதயநிதி

திருவண்ணாமலை மாவட்டத்தில் உதயநிதி ஸ்டாலின் பங்கேற்கும் நிகழ்ச்சிகள் குறித்து ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது

HIGHLIGHTS

திருவண்ணாமலை மாவட்டத்தில் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்கும் உதயநிதி
X

திமுக ஆலோசனைக் கூட்டத்தில்  எ. வ. வே. கம்பன் உரையாற்றினார்

கடந்த சட்டமன்ற தேர்தலின்போது, திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின், திமுகவின் வெற்றிக்காக பல்வேறு மாவட்டங்களில் சூறாவளி சுற்றுப்பயணம் மேற்கொண்டார். தேர்தல் வெற்றிக்காக தமிழகம் முழுவதும் அயராது பிரச்சாரம் செய்த திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் தேர்தல் வெற்றிக்கு பிறகு முதல் முறையாக திருவண்ணாமலை மாவட்டத்தில் நடைபெறும் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்க இம்மாத இறுதியில் வர உள்ளார்.

அப்போது திருவண்ணாமலை மாவட்டத்தில் திமுக இளைஞரணி சார்பில் நடைபெறும் இளைஞர் பயிற்சி பாசறை உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகளில் திமுக இளைஞரணி செயலாளர், திருவல்லிக்கேணி சட்டமன்ற உறுப்பினர் உதயநிதி ஸ்டாலின் பங்கேற்க உள்ளார்.

அதை ஒட்டி நிகழ்ச்சிகளுக்கான முன்னேற்பாடுகள் மற்றும் சிறப்பான வரவேற்பு அளித்தல் குறித்த ஆலோசனைக் கூட்டம் திருவண்ணாமலை மாவட்ட திமுக அலுவலகத்தில் நடைபெற்றது . இந்த ஆலோசனைக் கூட்டத்திற்கு திமுக மாநில மருத்துவர் அணி துணைத் தலைவர் மருத்துவர் எ. வ. வே. கம்பன் தலைமை தாங்கினார்.

தலைமை செயற்குழு உறுப்பினர் ஸ்ரீதரன், நகர கழக செயலாளர் கார்த்திக் வேல்மாறன், செங்கம் சட்டமன்ற உறுப்பினர் கிரி, கலசப்பாக்கம் சட்டமன்ற உறுப்பினர் பெ.சு.தி.சரவணன், மற்றும் மாவட்ட துணை செயலாளர் பிரியா விஜயரங்கன், விஜயலட்சுமி ரமேஷ், மாவட்ட பொருளாளர் பன்னீர்செல்வம் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

கூட்டத்தில் பேசிய கம்பன் கூறுகையில், தமிழகம் முழுவதும் அயராது தேர்தல் பிரச்சாரம் செய்த திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின், தேர்தல் வெற்றிக்கு பிறகு முதல் முறையாக திருவண்ணாமலை மாவட்டத்தில் நடைபெறும் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்க இம்மாத இறுதியில் வர உள்ளார் .

எனவே நமது மாவட்டத்திற்கு வரும் அவருக்கு, வருகையின் போது சிறப்பான வரவேற்பு அளிக்க வேண்டும். அது மட்டுமல்லாமல் , அனைத்து நிகழ்ச்சிகளிலும் ஆயிரக்கணக்கானோர் திரண்டு வெற்றிகரமாக நிகழ்ச்சியினை நடத்திட வேண்டும், மேலும் இளைஞரணி சார்பில் நடைபெறவுள்ள பயிற்சிப் பாசறையில் திரளாக கலந்து கொள்ள வேண்டும் என எ. வ. வே. கம்பன் கேட்டுக்கொண்டார்

கூட்டத்தில் திருவண்ணாமலை தெற்கு மாவட்டத்தை சேர்ந்த திமுக நகர செயலாளர்கள் ஒன்றிய செயலாளர்கள், பொதுக்குழு உறுப்பினர்கள், அணி அமைப்பாளர்கள், நகர மன்ற உறுப்பினர்கள், மாவட்ட ஊராட்சி குழு உறுப்பினர்கள், உள்ளாட்சி பிரதிநிதிகள் , ஒன்றிய கவுன்சிலர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

Updated On: 8 Oct 2022 9:10 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    புத்தாண்டு நல்வாழ்த்துகள்: வாழ்க்கையை வண்ணமயமாக்கும் பொன்மொழிகள்
  2. குமாரபாளையம்
    குமாரபாளையத்தில் இரண்டு மணி நேரம் கொட்டிய கனமழை
  3. வீடியோ
    நாடாளுமன்றத்துக்கு வந்தது புதிய படை!அப்படி என்ன சிறப்பு ! || #crpf...
  4. லைஃப்ஸ்டைல்
    அறுபதாம் அகவை வாழ்த்துக்கள்: ஒரு புதிய அத்தியாயத்தின் ஆரம்பம்
  5. லைஃப்ஸ்டைல்
    அன்பு வாழும் கூடு..! புதுமனை புகுவிழா வாழ்த்து..!
  6. லைஃப்ஸ்டைல்
    வாழ்க்கையின் இனிய பாடலுக்கு இதயப்பூர்வமான வாழ்த்துகள்
  7. குமாரபாளையம்
    சிவன் கோவில்களில் பிரதோஷ வழிபாடு
  8. ஈரோடு
    சென்னிமலையில் வீடுகளுக்குள் புகுந்த மழை வெள்ளம்..!
  9. லைஃப்ஸ்டைல்
    சுருங்க சொல்லி விளங்க வைக்கிறேன்..! SMS பிறந்தநாள் வாழ்த்து..!
  10. குமாரபாளையம்
    அரசு அனுமதியின்றி செயல்பட்ட பார் மூடல்; கலெக்டர் உத்தரவு