/* */

வீடுகளிலேயே விநாயகர் சதுர்த்தி விழா கொண்டாட மாவட்ட ஆட்சியர் வேண்டுகோள்

திருவண்ணாமலை மாவட்டத்தில் விநாயகர் சதுர்த்தியை வீடுகளிலேயே பாதுகாப்பாக கொண்டாடுமாறு கலெக்டர் முருகேஷ் கேட்டுக்கொண்டுள்ளார்

HIGHLIGHTS

வீடுகளிலேயே விநாயகர் சதுர்த்தி விழா கொண்டாட மாவட்ட ஆட்சியர்  வேண்டுகோள்
X

திருவண்ணாமலை கலெக்டர் முருகேஷ்

திருவண்ணாமலை மாவட்டத்தில் விநாயகர் சதுர்த்தி விழாவை பொதுமக்கள் தங்கள் வீடுகளிலேயே பாதுகாப்பாக கொண்டாடுமாறு ஆட்சியர் முருகேஷ் கேட்டுக்கொண்டுள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், திருவண்ணாமலை மாவட்டத்தில் கொரோனா வைரஸ் தொற்று பரவாமல் தடுக்கவும், பொது மக்கள் நலன் கருதியும், அரசு உத்தரவின் படி விநாயகர் சதுர்த்தி பண்டிகை நாளான வருகிற 10-ந் தேதியன்று (வெள்ளிக்கிழமை) பொது இடங்களில் விநாயகர் சிலைகளை நிறுவுவதற்கு தடைவிதிக்கப்பட்டுள்ளது. மேலும் விநாயகர் சிலைகளை ஊர்வலமாக எடுத்துச் செல்வதற்கும், நீர்நிலைகளில் கரைப்பதற்கும் தடை செய்யப்பட்டுள்ளது.

எனவே பொது மக்கள் விநாயகர் சதுர்த்தி விழாவை அவரவர் வீடுகளிலிலேயே பாதுகாப்பான முறையில் கொண்டாட அறிவுறுத்தப்படுகிறது. மேலும் வீடுகளில் வைத்து வழிபாடு செய்த சிலைகளை கோவில்களின் வெளிப்புறத்திலோ, சுற்றுப்புறத்திலோ வைக்கவும் அனுமதி அளிக்கப்படுகிறது. பண்டிகை தொடர்பான பொருட்கள் வாங்க கடைகள் மற்றும் சந்தைகளுக்கு செல்லும் பொதுமக்கள் தவறாது முககவசம் அணிவதோடு, சமூக இடைவெளியை கட்டாயம் கடைபிடிக்குமாறும் அறிவுறுத்தப்படுகிறது. அரசின் இந்த நடவடிக்கைகளுக்கு பொதுமக்கள் முழு ஒத்துழைப்பை அளிக்க வேண்டும். என தெரிவித்துள்ளார்

Updated On: 7 Sep 2021 6:49 AM GMT

Related News

Latest News

  1. காங்கேயம்
    சிறுமிக்கு பாலியல் தொல்லை; குண்டா் சட்டத்தில் 8 போ் கைது
  2. நாமக்கல்
    நாமக்கல்லில் முட்டை விலை உயர்வு!
  3. மேட்டுப்பாளையம்
    அன்னூரில் மழை வேண்டி கழுதைகளுக்கு திருமணம் செய்து வைத்த கிராம மக்கள்
  4. திருப்பூர்
    திருப்பூர்; மாணவா்களுக்கு கோடைகால கலைப் பயிற்சி முகாம்
  5. லைஃப்ஸ்டைல்
    ‘இலையுதிர்க்காலம் நிரந்தரம் அல்ல’
  6. லைஃப்ஸ்டைல்
    நம்பிக்கையுடன் முன்னேற உதவும் சில எழுச்சியூட்டும் தமிழ் வரிகள்!
  7. லைஃப்ஸ்டைல்
    ‘ அமைதியான நதியினிலே ஓடும் ஓடம் ... அளவில்லாத வெள்ளம் வந்தால் ஆடும்’
  8. வானிலை
    தமிழகத்தில் அடுத்த 2 நாட்களுக்கு ஓரிரு இடங்களில் மிதமான மழைக்கு...
  9. லைஃப்ஸ்டைல்
    அம்மா என்றழைக்காத உயிர் இல்லையே!
  10. கல்வி
    நாளை வெளியாகிறது 12ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள்