/* */

திருவண்ணாமலை மாவட்ட ஊரக வளர்ச்சிப் பணிகளை ஆட்சியர் முருகேஷ் ஆய்வு

திருவண்ணாமலை மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் நடந்து வரும் ஊரக வளர்ச்சி பணிகளை கலெக்டர் முருகேஷ் ஆய்வு செய்தார்.

HIGHLIGHTS

திருவண்ணாமலை மாவட்ட ஊரக வளர்ச்சிப் பணிகளை ஆட்சியர் முருகேஷ் ஆய்வு
X

திருவண்ணாமலை மாவட்டத்தில் நடைபெற்று வரும் வளர்ச்சிப் பணிகளை ஆட்சியர் முருகேஷ் ஆய்வு மேற்கொண்டார்.

திருவண்ணாமலை மாவட்டம் வேங்கிக்கால் ஊராட்சியில் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை சார்பில் தேசிய கிராம சுயாட்சி திட்டத்தின் கீழ் ரூ. 23.57 லட்சம் மதிப்பில் கட்டப்பட்டு வரும் ஊராட்சி மன்ற அலுவலகம் கட்டுமான பணியினை மாவட்ட ஆட்சித்தலைவர் முருகேஷ், நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

ஆடையூர் ஏரியில் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை சார்பில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதியளிப்புத் திட்டத்தின் கீழ் ரூ. 9.07 லட்சம் மதிப்பீட்டில் உறிஞ்சிக் குட்டை அமைக்கும் பணியினை ஆய்வு செய்தார்.

மேலதிக்கான் ஊராட்சியில் அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தின் கீழ் ரூ. 1.83 லட்சம் மதிப்பீட்டில் கட்டப் பட்டு வரும் நூலகக் கட்டடம் மற்றும் சீரமைப்பு பணிகளை ஆய்வு செய்தார்.

உடையான் நந்தல் ஊராட்சியில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதியளிப்புத் திட்டத்தின் கீழ் ரூபாய் 7 லட்சம் மதிப்பீட்டில் பெருமளவு மரக்கன்றுகள் நடும் பணிகள் நடைபெற்று வருவதை பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

இந்த ஆய்வின்போது திருவண்ணாமலை வருவாய் கோட்டாட்சியர் வெற்றிவேல் ,உதவி திட்ட அலுவலர் ,வட்டார வளர்ச்சி அலுவலர்கள் ,மற்றும் துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

Updated On: 2 March 2022 1:38 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    அலட்சியம்: தோல்விக்கான பாதையை நோக்கிய ஒரு பயணம்
  2. நாமக்கல்
    நாமக்கல்லில் 11 மையங்களில் நீட் தேர்வு 6,180 பேர் பங்கேற்பு: 120 பேர்...
  3. கவுண்டம்பாளையம்
    தடாகம் பகுதியில் 12 கிலோ கஞ்சா பறிமுதல் ; இருவர் கைது
  4. லைஃப்ஸ்டைல்
    மின்விசிறியா அல்லது காற்றூதியா? மின்சாரம் சேமிப்பது எது?
  5. காங்கேயம்
    சிறுமிக்கு பாலியல் தொல்லை; குண்டா் சட்டத்தில் 8 போ் கைது
  6. நாமக்கல்
    நாமக்கல்லில் முட்டை விலை உயர்வு!
  7. மேட்டுப்பாளையம்
    அன்னூரில் மழை வேண்டி கழுதைகளுக்கு திருமணம் செய்து வைத்த கிராம மக்கள்
  8. திருப்பூர்
    திருப்பூர்; மாணவா்களுக்கு கோடைகால கலைப் பயிற்சி முகாம்
  9. ஈரோடு
    ஈரோட்டில் இன்று (மே.5) 5வது நாளாக 110 டிகிரிக்கு மேல் வெயில் பதிவு
  10. லைஃப்ஸ்டைல்
    ‘இலையுதிர்க்காலம் நிரந்தரம் அல்ல’