தூய்மை அருணை அமைப்பு சார்பில் தூய்மை பணி
தூய்மை அருணை அமைப்பு சார்பில் இன்று திருவண்ணாமலை முழுவதும் அமைச்சர் தலைமையில் தூய்மை பணி நடைபெற்றது
HIGHLIGHTS
திருவண்ணாமலை நகரில், தூய்மை அருணை சார்பில் அய்யங்குளத்தெரு, கடலைக் கடை சந்திப்பு, பஜார் வீதி, செங்குட்டுவன் தெரு, செங்கம் சாலை ஆதிசேஷன் நகர், செங்கம் ரோடு முதல் தெரு, தாமரை நகர், சமுத்திரம் ஏரிக்கரை ஆகிய பகுதிகளில் தூய்மையான ஒருங்கிணைப்பாளர்கள், தூய்மை காவலர்கள் கால்வாய்கள் வருதல் தூய்மைப்படுத்துதல், சுத்தப்படுத்தல், அழகுபடுத்துதல் போன்ற பணிகளை மேற்கொண்டனர், மேற்கண்ட பணிகளை அவர்களுடன் இணைந்து அமைச்சர் எ வ.வேலு , அவர்கள் தூய்மை பணியை மேற்கொண்டார்.
பின்பு செய்தியாளர்களிடம் கூறும்போது மழைக்காலம் என்பதால் கால்வாய்களில் நீர் வெளியேறி சாலையில் செல்வதால் பொதுமக்களுக்கு மிகவும் இடையூறாக இருந்தது. அதனை உடனடியாக சீரமைத்து சரி செய்து வருகிறோம். அத்துடன் அப்பகுதி பொதுமக்களின் கோரிக்கைகளை கேட்டறிந்தார்.
தூய்மை அருமை ஒருங்கிணைப்பாளர்கள், தூய்மை காவலர்கள் ஆர்வத்துடன் தூய்மைப் பணியை மேற்கொள்ளும்போது அவர்களுடன் சேர்ந்து இப்பணியில் ஈடுபடும் போது மகிழ்ச்சியாக உள்ளது என கூறினார்.
இப்பணியில் திமுக மாநில மருத்துவர் அணி துணைத் தலைவர் மருத்துவர் கம்பன், முன்னாள் நகரமன்ற தலைவர் ஸ்ரீதரன், நகர கழக செயலாளர் கார்த்திக் வேல்மாறன் , மாவட்ட கலை இலக்கிய பகுத்தறிவு பேரவையின் அமைப்பாளர் டி.வி.எம்.நேரு, தூய்மை அருணை ஒருங்கிணைப்பாளர் ஏ. ஏ. ஆறுமுகம், மற்றும் தூய்மைப் பணியாளர்கள் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.